பக்கம்:புராண மதங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பாப்ட் I 'புராண மதங்கள் கங்கன், தக்கன், நாகன், கம்பளாச்சுவன், நீரன், ஜராவதன், ஏலாபத்திரன், கார்க்கோடகன், சங்கப்பா லன், தனஞ்சயன், பரமன், வாசுகி, எனும் நாகங்கள், ஒவ்வொன்று ஒவ்வொரு மாதம், முறை வைத்துக் கொண்டு, எழு குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ஒற் றைச் சக்கரத் தேரை இழுப்பார்கள் !! இவ்வளவு மட்டுமா! தேரின் முன், ஆடல் பாட லும் உண்டு. மாதத்துக் கொருவராக முறை வைத்துக் கொண்டு ஊருணாயு, தும்புரு , நாரதர், ஆஹா, ஊஹு, விசுவாவசு, திருதிராட்டிரன், சூரியன், வாச்சன், உக்கிர சேனன், வரருசி , சித்திரன் காந்தரு , என்பவர்கள் பாடு வர், கிருகத்தலை, சிகத்தலை, மேனகை, சகசந்நிசை, பிர மலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி , உருப் பசி , பூர்வசித்தி, திலோத்தமை, அரம்பை, எனும் , அழ கிகள் ஆடுவர் ! நாள் தோறும், தேரேறி, மேருவை வலம் செய்யும், ஓயாத வேலை இருக்கிறதே என்பதற் காகச் சூரியதேவன் குடும்ப காரியத்தைக் கவனிக்காம லிருந்துவிட்டார், என்று எண்ணிவிடாதீர்கள். அவருக் ருத் தேவிமார் இருவர் ! - ஒருவரிலிருந்து மற்றொருவர் தோன்றினர். சஞ்ஞா தேவியாரைச் சூரிய தேவன் தாரமாகக் கொண்டு, எவ்வளவோ வேலைகளுக் கிடை யில், வைவச்சுதமது, யமன், யமுனை, ஆகிய குழந்தை களுக்குத் தகப்பனானார். மூன்று குழந்தைகளை ஈன் றெடுக்குமட்டும். சஞ்சாதேவிக்குக் காதல் தென்றலாகி , சூரியனுடைய கனலைத் தாங்கும் நிலையைத் தந்தது போலும்! பிறகோ , தேவியார், சூரியனின் வெப்பத் தைத் தாங்கமாட்டாமல் தவித்து, தன் சாயலை' ஒரு பெண்ணாக்கிவைத்து விட்டுத் தாய்வீடு சென்றுவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/91&oldid=1033330" இலிருந்து மீள்விக்கப்பட்டது