பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

377


நால்வகைப் படைகளோடு நானிலத்தில் நல்லாட்சி செய்யும் பேரரசன் வாழ்க என்று வாழ்த்துதல் செய்கிறேன். நெடிது வாழ்க.

பனி பழுநிய பல் யாமத்துப் பாறு தலை மயிர் நனைய, இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின், இணையல் அகற்ற, என் கினை தொடாக் குறுகி,

அவி உணவினோர் புறங்காப்ப, அற நெஞ்சத்தோன் வாழ, நாள் என்று, அதற் கொண்டு வரல் ஏத்திக்,

‘கரவு இல்லாக் கவி வண் கையான், வாழ்க!” எனப் பெயர் பெற்றோர் பிறர்க்கு உவமம் தான் அல்லது, தனக்கு உவமம் பிறர் இல் என, அது நினைந்து, மதி மழுகி, ஆங்கு நின்ற எற் காணுஉச் சேய் நாட்டுச் செல் கிணைளுனை! நீ புரவலை, எமக்கு என்ன, மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும், கடல் பயந்த கதிர் முத்தமும், வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும், கனவில் கண்டாங்கு வருந்தாது நிற்ப, நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்; நாடு என மொழிவோர், அவன் நாடு என மொழிவோர்; வேந்து என மொழிவோர், ‘அவன் வேந்து என மொழிவோர்; புகர் நுதல் அவிர் பொற் கோட்டு யானையர், கவர் பரிக் கச்சை நல் மான், வடி மணி, வாங்கு உருள, கொடிமிசை நல் தேர்க் குழுவினர், கதழ் இசை வன்கணினர், வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டிக், கடல் ஒலி கொண்ட தானை அடல் வெங் குருசில் மன்னிய நெடிதே!

திணை - அது துறை - வாழ்த்தியல், சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.