பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

93



அதன் தலைவன் சோழர் தலைவன் சென்னி. அவனுடன் போர் செய்ய முற்படுவாராயின் அவர்களுக்கு உறுவது யாம் அறிவோம். அவன் தோளோடு மலைந்தோர் வாழ்ந்ததும் இல்லை; அவன் காலடியில் விழுந்து வணங்கியவர் தாழ்ந்ததும் இல்லை.

கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட பழன வாளைப் பரூஉக் கண் துணியல் புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து செழுங் கோட் பெண்ணைப் பழம் தொட முயலும், வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் வாழக் கண்டன்றும் இலமே, தாழாது, திருந்து அடி பொருந்த வல்லோர் வருந்தக் காண்டல், அதனினும் இலமே.

திணை - வாகை துறை - அரச வாகை.

சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

62. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளி

ஒருவரை ஒருவர் வெல்வது எங்ஙனம் முடியும்? எதிர்த்த

இருதிறத்துப் படை வீரர்கள் படுகளத்தில் பட்டு உயிர் துறந்தனர். பேய்களும் பருந்துகளும் அவர்களைச் சுற்றி வட்டமிடுகின்றன.