பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

353


வீழ்வதுபோல நாமும் உயிரிழப்பது உண்மை என்றும்

உணர்வாயாக!

சொற்பொருள்: 1. கடுப்பு - குறுந்தடி 2. ஒழுக்கு ஒழுக்கம். 3. சிலைப்ப - முழங்க. 4. ஊற்றம் - வலி. 13. அழி - வைக்கோல். 19. சூடுகிழிப்ப - சூட்டுக்கோலிட்டுத் தசை வாட்டப்பட்ட

367. வாழச் செய்த நல்வினை!

பாடியவர்: ஒளவையார். சிறப்பு : சேரமான் மாரி வெண் கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந் தாரைப் பாடியது. திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

(சோழன் இயற்றிய யாகத்திற்கு அவ்விரு பெரு வேந்தரும் வந்திருந்தனர்; மூவரும் ஒருங்கே அமர்ந்திருந்த நிலை கண்டு, ஒளவையார் அவரை வாழ்த்துகின்றனர். ‘வாழச்செய்த நல்வினை அல்லது, ஆழுங்காலைப் புணை பிறிதில்லை என்னும் அறவாக்கு, மிகவும் போற்றிக் கொளத்தக்கது)

நாகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினும் தம்மொடு செல்லா; வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும், ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து, 5 பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல், வாழச் செய்த நல்வினை அல்லது, 10

ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை; ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீப் புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்; யான்அறி அளவையோ இவ்வே, வானத்து 15

வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப் பரந்து இயங்கும் மாமழை உறையினும், உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக, நும் நாளே!

1. நாரரி தேறல் தவாது நன்மகிழ்ந்து - புறத்திரட்டு

! 2. துணை பிறிது - புறத்திரட்டு

3. இயங்கும் - புறத்திரட்டு