பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

புறநானூறு - மூலமும் உரையும்


392 HDongjip - opewspin e-cosulio

(வளவனிடம் பரிசில் பெற்றுச் செல்வார் அந்த நன்றியுணர்வின் செறிவோடு சொல்லிய செய்யுள் இது. இரவலனின் கந்தையைப் போக்கித் தன் அறையிலிருந்த புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇனன் என்றால், வளவனின் மனக் கசிவை என்னென்பது!)

வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும், புள்ளும் உயர்சினைக் குடம்பைக் குரல்தோற்றினவே; பொய்கையும் போதுகண் விழித்தன; பையச் சுடரும் சுருங்கின்று, ஒளியே பாடெழுந்து இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, 5

இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, எஃகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை, வைகறை அரவம் கேளியர்! பலகோள் செய்தார் மார்ப எழுமதி துயில்' எனத் தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, 10

நெடுங்கடைத் தோன்றி யோனே; அது நயந்து, 'உள்ளி வந்த பரிசிலன் இவன் என, நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு, மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல், பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு, 15

மாரி யன்ன வண்மையின் சொரிந்து, வேனில் அன்ன என் வெப்பு நீங்க, அருங்கலம் நல்கி யோனே, என்றும், செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை, அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த 20

தீயொடு விளங்கும் நாடன், வாய்வாள் வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன் எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும், தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும். என்னென்று அஞ்சலம் யாமே, வென்வேல் 25 அருஞ்சமம் கடக்கும் ஆற்றல்;அவன் திருந்துகழல் நோன்தாள் தண்நிழலேமே! "பலவகைப்பட்ட செய்தொழில் மலிந்த மாலையணிந்த மார்பனே! வைகறையிலே எழுகின்ற பல்வகை அரவமும் கேளாய்; ஏமப் பாசறையில் இன்னமும் துயில்கின்றனையே! துயில் எழுக வேந்தே! என்று, ஒருநாள் புலர்காலைப் போதிலே, அவன் பாசறைக்கண் சென்று, தடாரி கொட்டி நின்றேன். நம்மை