பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

153


நிறைந்து குலுங்கின. காணக் கவின் மிகுந்து காட்சியளித்தது மாமரம். அருகிலுள்ள ஆற்றில் குளிர்ந்த நீர் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. ஆற்று நீரையும் மாமரத்தையும் ஒருங்கு கண்டவர் எவராயினும் அவருக்கு நாவில் நீர் ஊறாமல் இராது. ஆனால் கட்டுப்பாட்டை எண்ணித்தம்மை அடக்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

ஒரு சமயம் வெளியூரிலிருந்து வந்த இளங்கன்னிப் பெண் ஒருத்தி இந்த மாமரத்தின் அருகில் ஒடும் ஆற்றிற்கு நீராடச் சென்றிருக்கிறாள் பாவம்! அவள் ஒர் ஏழைப் பெண். வயிறு உணவைக் கண்டு இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. நீராடிக் கொண்டிருந்த பொழுது அருகிலிருந்த மாமரத்திலிருந்து கனிந்து முற்றிய காய் ஒன்று ‘தொபுக்கென்று தண்ணீரில் விழுந்து அவளருகே மிதந்து வந்தது. தமிழ்க் கவிதைகளை நன்றாகப் படித்த பெண்தான் அவள். ஆனால் அருகேயிருப்பது காவல்மரம் என்பதும் அதிலிருந்து விழுந்த காய்களை எப்போதும் எவரும் எந்த நிலையிலும் உண்ணக்கூடாது என்பதும் அறியாதவள். எனவே பசி மிகுதியால் தண்ணிரில் மிதந்து வந்த முதிர்காயை எடுத்துத் தின்னத் தொடங்கினாள். காவல் மரத்திலே இருந்த காவலன் ஒருவன் இதைப் பார்த்துவிட்டான்.அவள் ஏதுமறியாத பேதைப் பெண் என்பதையும் பாராமல் அரசன் முன்னிலையில், நீராடிக் கொண்டிருந்தவளை அப்படியே கொண்டு போய் நிறுத்திவிட்டான் காவலன். அப்போது அருகிலிருந்த புலவர் பெருமக்களும், பெரியோர்களும் “இவள் அறியாப் பெண்! கன்னிகை வேண்டுமென்றே இவள் குற்றம் செய்யவில்லை. இவளைத் தண்டிக்கக்கூடாது” என்று அரசனிடம் மன்றாடினர். ‘பெண் கொலை பெரும் பாவம்’ என்று அறவோர்கள் பலமுறையும் எடுத்துக் கூறினர். தான் வேற்றுாராள் என்றும், அது காவல் மரத்தின் காய் எனத் தனக்குத் தெரியாதென்றும் அந்த இளம் பெண்ணும் கண்ணிர் சிந்திக் கதறினாள். ஆனால் பிடிவாதமும் முன்கோபமும் மிக்கவனான நன்னன், யார் சொல்லியதையும் கேட்காமல் வஞ்சிக்கொடி போலிருந்த அந்த அழகிய இளம் பெண்ணைக் கொலைக்களத்திற்குக் கொண்டு