பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * _> பகைவீரரை வென்றழித்தலாகிய பூசன் மாற்றும், ஆநிரைகளைச் சுரத்திடத்தேநடத்திக்கொண்டுசெல்லலாகிய சுரத்து உய்த்தலும், ஊரினை அணுகிய விடத்துச் சுற்றத்தார் மகிழ்தலான தலைத்தோற்றமும், ஊர்மன்றிடத்தே நிரைகளைக் கொண்டு நிறுத்தலாகிய தந்து நிறையும், அனைவருக்கும் பகுத்துக் கோடலாகிய பாதீடும், கள்ளுண்டு ஆடிமகிழலாகிய உண்டாட்டும், வேண்டியார்க்கு வழங்கிய மகிழலாகிய கொடையும், பகைவரை ஒற்றி அறிந்து உரைத்தவரைப் பாராட்டும் புலனறி சிறப்பும், நன்னிமித்தம் ஒர்ந்துரைத்தாரைச் சிறப்பிக்கும் பிள்ளை வழக்கும், துடியனின் தொண்டினை வியக்கும் துடிநிலையும், கொற்றவை அருளினை வேண்டும் கொற்றவை நிலையும், மறவர் மகளிரது வேலனாடுதலாகிய வெறியாட்டும் என்பவையாம். . xxxxxx