பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

180 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் மலைபோன்ற அகலத்தினையுடைய எம் கணவன் அருன யான் வரு கிற விருந்தைப் போற்றும் செல்வம் எ - று. வனம் வாழி. பெயரோடு அடுத்துக் கூறியவழிப் புறப்புறமாம்; நெடுதல் வாடை போலப் பெயரோடு அடாது கூறியவழிப் பெருந்திணையாம்; இவை பிறர் மதம் என்றலும் ஒன்று. பொதுவியற் சூத்திரம் நான்கிற்குப் பாட்டு நாற்பத்தைந்தும் முடிந்தது. பத்தாவது பொதுவியற்படலம் முற்றிற்று. பதினொன்றாவது கைக்தியப்படலம் (ஆண்பாற் கூற்று) (சூத்திரம் 14 காட்சி யையந் துணிவே யுட்கோள் பயந்தோர்ப் பழிச்ச னலம்பா ராட்டல் நயப்புற் றிரங்கல் புணரா வீரக்கம் வெளிப்பட விரத்த லெனவிவ் வொன்பதும் 5 ஆண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும். என் - னின், ஆண்பாற் கூற்றுக் கைக்கிளை ஆமாறு உணர்த் துதல் நுதலிற்று. இ - ன், காட்சி முதலாக வெளிப்பட இரத்தல் ஈருகச் சொல் லப்பட்ட ஒன்பதும் ஆண்பாற்கூற்றுக் கைக்கிளையாம் எ - று. அவற்றுள்:-