பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 தாயம் Life is not for fun, my gal. lt may be a big joke But certainly no fun.” இதை கான் சொல்லவில்லை. என்னிடம் இந்த பாஷை எது? ஆனால் நள்ளிரவில் விழிப்பு வந்து, இனி தூக்கத்தில் இமைகள் மூடாது எனத் தெரிந்தபின் ஜன்னல் வழி சிலவு மயக்கும் முழுநிழல் அரைஒளி முக்கால் இருள் நிலையில், நிலைக்கண்ணாடியிலிருந்து என் முகம், எனக்கே புதுமுக மாக-அப்பவும் என்னிடம் சொல்லவில்லை, இவ்வார்த்தை களைச் சிரிக்கிறது. ஜன்னல் கம்பிகளின் கிழற்கோடுகளே புலியின் வரிக்கோடுகளாக மாறிக் காட்டும் மருள் நேரம். பூரீதர், இந்தநேரத்தில் நீ.என்ன பண்ணிக் கொண்டி ருப்பாப்? உன் ஊரில் இப்போ பகலா, விடிவேளையா? தனியாயிருக்கே. அம்மாவை கினைக்கிறாயோ? சிகரெட், சிகரெட்-? இந்த பழக்கம் எல்லாம் இங்கிருக்கும்போது உனக்கு இல்லை. ஆனால் தனிமையைக் கொல்லும் சாக்கில் தானே இந்தப் பழக்கம் ஆரம்பிக்குமாமே...? ஆனால் சிகரெட் இப்போ யார் பிடிக்கல்லே? அதைக் கெட்டபழக் கம், பாபம் என்று சொன்ன நாளெல்லாம் போயிடுத்து. அத்தோடு கிக்கறயா...இல்லை, இன்னும் வேறு ஏதானும்? நானா கெனச்சுக்கறேன், நானே என்னைப் புண்படுத் திக்கறேன், நானே அனாவசியமா அகியாயம் கினைக்கி றேன். எனக்கே தெரியறது. ஆனால் மனசு என்கறது அதற்குத் துணையுமில்லாமல்-சும்மா இருக்கமாட்டன்கற தேடா... என்னடா செய்வேன், என் மகனே? சுருக்க வந்து டேன்! முடியல்லேடா! இன்று பிற்பகல் சுமார் மூனுக்கு பழைய ட்ரங்கைஎதுக்குன்னுகூட மறந்து போச்சு. இப்போ கொஞ்ச நாளா