பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

છે. பார்க்கவி அவள் கணவன் சிரித்தான். என்னம்மா பேத்தறே: யார் எடுக்க முடியும்? கர்ணகுண்டலம் மாதிரி சாவிக் கொத்தோ உன் இடுப்பில் தொங்கிண்டே இருக்கு. எங்கே யாவது ஞாபக மறதியா வெச்சிருப்பே. சரியா தேடிப் பார்-' - 'அடே, எனக்கா ஞாபக மறதி? 'யானைக்கும் அடி சறுக்கும் அம்மா. எப்பவுமே நீயே எல்லாம் தெரிஞ்சவளா இருக்க முடியுமா?" “நிறுத்துடா உன் பிரசங்கத்தை மறுசாவி போட்டுத் திறந்திருக்கு- எனக்கென்னவோ சொல்ல வந்துட்டான் பெரிசா!' 'காக்கா கிக்கா கொத்தி-' "ஆமாண்டா! கொத்திண்டுபோய்க் கடையிலே கொடுத்து, செட்டியாரே செட்டியாரே! எனக்கு ஒரு வடை கொடுத்து மீதி சில்லறை தாங்கோ'ன்னு கேட்டுதா? இங்கே என்னவோ சூது நடக்கிறது.டா! தெரியாத்தனமா மாட்டிண்டு ட்டோண்டா!' அவளுக்கு முதுகுத் தண்டு சில்லென்றது. இதுக் கென்ன அர்த்தம்? அம்மா புழுவாய்த் துடிக்கறார். சின்ன இடத்தில் கிற்காமல் பரவாட்டல் ஆடறார். ஒண்ணா ரெண்டா, நூறு ரூபாய்கள். தட்டித் தட்டிச் சுண்டி சுண்டி எண்ணினால் நூறு, அம்மாவுக்குத் தனியாய்ப் பண லேவா தேவி உண்டு. சீட்டுப் பிடிச்சு, தம்பிடிக்குத் தம்பிடி கந்து வட்டி விட்டு ஒண்ணைப் பத்தாக்கி பத்தை நூறாக்கிஅம்மா ஒண்னு சொல்வதில் சந்தேகமில்லை அவர் இல்லாட்டா இந்த வீடு இல்லை. 'இல்லை. இன்னிக்கு இதை நான் சும்மா விடப் போற தில்லை, அடிவரை ஆராயத்தான் போறேன்-'