பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 அரவான் ஆனால் சண்டையிலே போய்ச் சாவறதுக்குன்னு ஒரு சாவு பாக்கியில்லே; இப்போ கான் செத்துப் போயாச்சு. உசிரோடு இருக்கிறது உசிரில்லே, உடல்தான். இதுவும் மடியறது இண்ணக் கில்லாட்டி நாளைக்கு; அண்ணக்கி மில்லாட்டி அதுக்கு மறுநாள்.' விடியிருட்டில்தான் குழந்தையின் கொர்கொர்" சத்தம் அடங்கியது. அவள் முகத்தை அவன் பார்க்க முடிய வில்லை. அவள் கன்னத்தை ஒரு தடவை வருடினான். அவன் மனம் நெகிழ்ந்தது. குழந்தையை அதன் கங்தையில் சுற்றிக்கொண்டு கிளம்பினான். வெளியிலும் இருட்டு. ஒரு பீடிப்பொறி மாத்திரம் தெரிக்தது. - -

  • யாரய்யா?” 'நான்தான் பட்டணம்.-குரலிலிருந்து தன் மேல் சீறி விழுந்த ஆள் என அறிந்தான்.

"சுடுகாட்டுக்குப் போற வழி எது ஐயா?” அந்த நெருப்புப் பொறி எழுந்தது. 'கான் காண்பிக் கிறேன், வா-' பட்டணம் காண்பித்த வழியூடே அவன் பின்பற்றிச் சென்றான். -