39
முல்லை பிஎல். முத்தையா 39
"பெண் காதில் அணிந்திருப்பது என்ன?” என்று கேட்டார் பேராசிரியர்.
'காதில் அணிந்திருப்பது கம்மல்!” என்றார்
"அதுதான் என் தொண்டையில் வந்திருக் கிறது! அதனால்தான் சரியாகப் பேச முடிய வில்லை என்றார் பேராசிரியர். . . . . . . . . . .
பேராசிரியரின் தொண்டை கம்மியிருப்பதை உணர்ந்தார் நண்பர்.
(காதணி, கம்மல், கடுக்கன், தோடு என பலவாறு கூறுவது உண்டு.)
- 38
அவன் கடையில் இருக்க வேண்டியவன்
மாணவர் கலைக் கழகத்தின் ஆண்டு விழா வுக்கு ஒரு புலவர் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார். .
விழா தொடங்குமுன், மாணவர்களிடம் பல கேள்விகளை கேட்டு, அவர்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து பார்த்தார் புலவர். -
அந்த மாணவர்களில் ஒருவன் மட்டும், புலவரின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் மக்காக இருந்தான். -
அவனைப் பார்த்து, 'நீ எந்த இனத்தைச் சேர்ந்தவன்?' என்று கேட்டார் புலவர். -