பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

அச் செய்தியைத் தெரிவிக்க, அவரை நன்கு அறிந்து, பழகிய புலவரிடம் சொல்லச் சென்றார் ஒருவர். தயக்கத்துடன், "இன்னார் தவறி விட் டார்' என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் அந்தப் புலவர், "அவர் அனைத்திலும் வல்லவர்; அவர் எதிலும் தவறவே மாட்டார், அத்தகையவர் தவறி விட்டார் என்று கூறுகிறீர்களே அது பொருந்தாது தவறுவது அறிவற்றவர்களுக்கு அல்லவா ஏற்படும்’ என்றார்.

செய்தி சொல்ல வந்தவருக்கு புலவர் கூறிய சொற்கள் விளங்காமல் சிறிது நேரம் விழித்துக் கொண்டிருந்தார். பிறகுதான். புலவர் கூறியவற்றி லிருந்து தவறுதல் என்ற சொல்லுக்கு பிழை செய்தல்' என்னும் பொருளில் புலவர் பேசுகிறார்.

என்பது விளங்கியது.

செய்தி சொல்ல வந்தவரின் முகத்தின் சோகத்தை அறிந்து, அவர் இறந்து விட்டார்’ என்பதை புலவர் உணர்ந்தார். -

செத்துப் போனார்', 'இறந்து விட்டார்’, 'காலமாகி விட்டார்’ என்று சொல்லாமல், தவ றி விட்டார்’ என்று கூறுவதும் உண்டு.

- 亨8 குத்து விளக்கும் கூடை விளக்கும்

புலவர் ஒருவர் தம்முடைய நண்பரான புலவர்

விட்டுக்கு இரவு வேளையில் சென்றார். .