பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3691 இராமன் மகிழ்ந்து புகழ்ந்தது. இலங்கையில் அனுமான் ஆற்றிய அருந்திறல்களை விபீட ணன் வாயிலா அறிந்த போது இராமன் பெரு மகிழ்ச்சியடைந் தான். அந்தக் கரும வீரனே இந்தத் தரும வீரன் உவந்து நோக் கின்ை. உள்ளம் களித்து உடல் பூரித்து இவ் வள்ளல் ஆடிய உரைகளைக் கவி வரைந்து காட்டியிருக்கிருர். உணர்ச்சி ததும்பி வந்துள்ள அவ் வுரைகள் அதிசய ஆர்வங்களை யூட்டியுள்ளன. கேள்கொள் மேலேயான் கிளத்திய பொருளெலாம் கேட்டான் வாள்கொள் நோக்கியைப் பாக்கியம் பழுத்தன்ன மயிலே நாள்கள் சாலவும் நீங்கலின் நலங்கெட மெலிந்த தி தோள்கள் விங்கித் தன் அாதனேப் பார்த்திவை சொன்னன். (1) கூட்டிர்ைபடை பாகத்தின் மேற்படக் கொன்ருய் ஊட்டிய்ை எளி ஊர்முற்றும் இனி அங் கொன்றுண்டோ? கேட்ட வாற்றில்ை கிளிமொழிச் சீதையைக் கிடைத்தும் மீட்டிலாதது என் வில் தொழில் காட்டக் கொல் விர! (2) கின்செய் தோள்வலி கிரம்பிய இலங்கையை நேர்ந்தோம் பின்செய் தோம்சில அவையினிப் பீடின்று பெறுமோ? பொன்செய் தோளிய்ை! போர்ப்பெரும் படையொடும் புக்கோம் என்செய் தோமென்று பெரும்புகழ் எய்துவான் இருந்தோம்.(3) என்ன தாக்கிய வலியொடு அவ் இராவணன் வலியும் உன்ன தாக்கினே பாக்கியம் உருக்கொண்டது ஒப்பாய்! முன்ன தாக்கிய மூவுலகு ஆக்கிய முதலோன் தன்ன தாக்கிய பதம் கினக்கு ஆக்கினென் பெற்ருய். (4) என்று கூறலும் எழுந்திரு கிலனுற இறைஞ்சி ஒன்றும் பேசலன் நாணினன் வணங்கிய உரவோன் நின்ற வானரத் தலைவரும் அரசுமந் நெடியோன் வென்றி கேட்டலும் விடுபெற்ருர் என வியந்தார். (5) (இலங்கைக் கேள்விப் படலம் 70-74) அதிசய ஆர்வத்தோடு அனுமானைப் பார்த்து இராமன் பேசியுள்ள வாசகங்களை ஆசை மீதுளர்ந்து நோக்கி இங்கே நாம் ஆனந்தம் அடைகின்ருேம். நிலைமை நீர்மைகளை உரைகள் நேரே காட்டியருள்கின்றன. அரிய பண்பாடுகள் பெரிய மேன்மைக ளாய்ப் பெருகிப் பேரின் பங்களை விளைத்து நிற்கின்றன.