பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3695 பாக்கியம் என்னும் வாக்கியங்கள் இரண்டு ஈண்டு வந்திருக் கின்றன. சீதை மனேவியாக அமைந்ததும், அனுமான் துணைவ கை வாய்ந்ததும் கனது புண்ணியப் பேறே என்று இவ் விர மூர்த்தி எண்ணி யிருப்பதை வாய்மொழி இனிது காட்டியது. உழுவலன்பும் விழுமிய பண்பும் தெரியவே உள்ளம் உருகி உவகை பெருகி உரைகள் வெளியே துள்ளி வந்தன. இவ்வாறு பரிவோடு பேசி வந்தவன் இறுதியில் அரிய வர பலங்களை அருள நேர்ந்தான். அவன் செய்துள்ள உதவிக்கு வையகமும் வானகமும் ஈடாகா என எண்ணியுணர்ந்து மூவருள் ஒருவன் ஆப் மேவியிருக்க வேண்டும் என்று ஆவலோடு முடிவு செய்து இக் கோமகன் உவகை மீதுார்ந்து மொழிந்தான். உலகு ஆக்கிய ఆ53ఖrár பதம் நினக்கு ஆக்கினென். சிருட்டி கருத்தாவாகிய பிரமாவாப் அமர்ந்து யாவும் படை த்து வருக எனப் பிரம பதவியை அனுமனுக்கு இராமன் இங்ங் னம் அருளி யிருக்கிருன். தான் மனித உருவில் மருவியிருக்கா லும் திருமாலின் அவதாரம் ஆகலால் அங்க மூல வாசனையால் இந்தவாறு ஆவேசமாய் அருள் புரிந்தான். அடைக்கலம்புகுந்த விபீடணனை இலங்காதிபதி ஆக்கினன். அடியவனை அனுமனே பிரமாவாக நிறுவினன். கையில் ஒன்றும் இல்லாதவன் ஆயினும் எல்லாம் உடை யவன் என்பது சொல்லால் விளங்கியது. சமையம் நேரும் பொழுது உண்மை நிலைகள் உலகமறிய வெளி வருகின்றன. தனது அவகார காரியத்திற்கு அனுகூலராய் நேர்ந்தவர் கருமம் முடியு முன்னரே அரிய பதவிகளை அடைய நேர்ந்தனர். விபீடணனை உரிமையாகச் சேர்த்துக் கொள்ளும்படி இராமனிடம் உறுதி கூறி அனுமான் உதவி புரிந்தான். அவன் - சேர்ந்தான்; அரசன் ஆளுன்; உடனே உள்ளம் உருகி இவனே உவந்து புகழ்ந்தான். பிரம பகமும் இவன் பெற்று மகிழ்ந்தான். பிறர்க்கு இதமாய் உதவி செய்கின்றவன் பெரு மகிமைகளை அடைவான் என்னும் உண்மை ஈண்டு உணர வந்தது. விரும்பா திருப்பினும் வினையின் பயன்கள் வினையாளரை விரும்பி வந்து அடைந்து கொள்ளுகின்றன. நிலைமைகள் சிந்திக்கத் தக்கன.