பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3765 திட்டுறு மழுவாள் வீரன் தாகையைக் செற்ருன் சுற்றம் மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் விட்டிஎன் தாதைக் காக மெய்ப்பலி விசும்பு ளோருக்கு ஊட்டுவன் உயிர்கொண்டென்னும் உண்மையும்.உணர்த்துவீரால் தாழ்விலாத் தவத்தோர் தையல் தனியொரு சிறையில் தங்கச் சூழ்விலா வஞ்சம் சூழ்ந்த கன்னேத்தன் சுற்றத் தோடும் வாழ்வெலாம் தம்பி கொள்ள வயங்கெரி கரகம் என்னும் விழ்விலாச் சிறையில் வைப்பேன் என்பதும் விளம்புவிசால். (5) நோக்கினிர் தானே எங்கும் துழைந்து நீர் இனிவே ருென்றும் ஆக்குவ தில்லை யாயின் அஞ்சல்என் றஃதுண் டன்றே வாக்கினின் மனத்தில் கையில் மற்றினி கவியா வண்ணம் போக்குமின் விாைவின் என்ருன் உய்ந்தனம் என்று போனர். (ஒற்றுக் கேள்வி 34-39) இங்கே விளைந்து வந்துள்ள உறுதிமொழிகளை விழைந்து கேட்டு வியந்து நிற்கின்ருேம். உரைகள் உள்ளச் செவிகளில் ஒலித்து ஒளிவீசி நிற்கின்றன. படைகளின் நிலைகளைப் புற நோக்கில் அறிந்து போகக் கரந்துவந்த ஒற்றர்களுக்குக் கன் அகத்தில் கருதியுள்ள எல்லா நிலைகளையும் தெளிவாக இவ்விரன் உரைத்திருக்கிருன். அருந்திறலாண்மைகள் பெருக்ககைமை களோடு பொலிந்து திருந்திய மொழிகளில் வெளி வந்துள்ளன. இராவணனிடம் போய்ச் சொல்லும்படி இராமபிரான் ஈண்டு உரைத்திருக்கும் உரைகளை ஊன்றி நோக்குங்தோறும் விர கம்பீரங்கள் ஆரவாரங்களோடு கோன்றி நம்கண் முன்னே களிநடம் புரிகின்றன. கருதியுணர்பவர் பெரிதும் மகிழ்கின்ருர். வெற்றிவீரன் விளம்பியது 'ஒற்றர்காள்! இலங்கையின் ஆட்சிமுழுவதையும் இளைய தம்பியாகிய விபீடணனுக்கு நான் வழங்கியிருக்கிறேன்; இதனை இராவணனுக்கு விளங்கும்படி சொல்லி விடுங்கள். அரிய பெரிய கடலிடையே அணைவகுத்து வானர சேனைகள் விறு கொண்டு எழுத்துள்ள நிலைகளை விளக்கிச் சொல்லுங்கள். அதி சய வில் வீரர் இருவர் அரக்கர் குலக்கை அடியோடு அழிக்க மூண்டு ஈண்டு வந்துள்ளார் என அவன் நேரே கூறுங்கள். இலங்காபுரி இருக்கும் இடம் எமக்குத் தெளிவாகத் தெரியா மையினலேதான் இதுவரை உன் உயிரும் உறவினங்களும் உல