பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39.18 - - கம்பன் கலை நிலை சொல்லும் அத்தனே அளவையில் மணிமுடி துறந்தான் எல்லி மைத்தெழு மதியமும் ஞாயிறும் இழந்த அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன்அமர் பொருமேல் வெல்லும் அத்தனே அல்லது தோற்றிலா விறலோன். மாற்றருந்தட மணிமுடி இழந்தவாள் அரக்கன் • ஏற்றம் ஏவ்வுல கத்தினும உயர்ந்துளன். எனினும் - ஆற்றல் நன்னெடும் கவிஞர்ஒர் அங்கதம் உரைப்பப் போற்றரும்புகழ் இழந்தபேர் ஒருவனும் போன் ருன். (5) மணிமுடி இழக்து இராவணன் பிணியுழந்து கின்ற கிலையை இந்தக் கவிப்படங்கள் நன்கு காட்டியுள்ளன. த லை ைய க் கொப்து விழ்த்தாமல் முடியையே குறிசெய்து இராமன் துணிக் திருக்கிருன். இராமபாணம் இராவணனுடைய முடியைக் கவ்விக் கொண்டு அதிவேகமாய் ஆகாயத்தில் ஒடியிருக்கும் காட்சியை வியந்து நோக்கி உவந்து நிற்கிருேம். மேருமலையின் கொடு முடியை வாயுபகவான் முன்னம் பறித்துப் போனது போல் அம்பு மகுடத்தை அடித்துப் போப் அலைகடலில் வீழ்த்தியுள் ளது. கோதண்ட வீரனுடைய பாணப் பிரயோகமும் அது வேகமாய் வேலைசெய்யும் விக்ககமும் அதிசய விசித்திரங்களாப் விரிந்துள்ளமையால் யாவரும் துதிசெய்து வருகின்றனர். - இரவிமேல் பாய்ந்த அனுமன் என்னலாயது. மகுடத்தைக் கவ்விப் போன அம்புக்கு அனுமான இங்ங் னம் உவமை கூறியிருக்கிரு.ர். சூரியனைக் கனிந்த பழம் என்று க்கிணந்து இளமையில் அனுமான் கதிரவன்மேல் பாய்ந்தான் ஆதலால் அக்கக் காட்சி இங்கே காட்டாக வந்தது. அனுமான் அம்புக்கும், சூரியன் மகுடத்திற்கும் ஒப்பாம். இராமபாணம்போல் வெற்றி விருேடு அனுமான் வேலை செப்து வருகிருன். அவ்வரவு நிலையை உறவுரிமையோடு கவி உணர்த்தி வருகிரு.ர். அனுமான் நின்கைத்தனு 3Tଈ୪T வாவிவாய் மொழியால் இராமனிடம் முன்னம் குறித்தருளியது இங்கே - கூர்ந்து சிந்திக்கவுரியது. வில்லும் அம்பும்போல் இராமனுக்கு அனுமன் வெல்லுங் திறங்களாப் விளங்கி நிற்கிருன். உவமான -_ உரைகளில் சவமான உண்மைகள் நயமாய் வெளிவருகின்றன ..