பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3615 ஆதலால் இவன்வரவு நல்வரவே எனவுனர்ந்தேன் அடிய னேனுன் வேத நூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பறியேன் என்று விட்டான் i IT" தன்ை ாரிகளு)ை லும் கணிப் ரி [I Iيلي கிலேயனேத்தும் கதிரோன் முன்சென்ஆ ஒதின்ை ஒதர்ே கடந்துபகை கடிந்துலகை உய்யக் கொண்டான். (4) வாத சேயின் வாத முறைகளையும் நீதி போதனைகளையும் இங்கே ஓதி யுணர்ந்து உவகை யுறுகின்ருேம். ப. தி கலங்கள் சுரந்து உரைகள் அதிசய சாதுரியங்களாப் வந்துள்ளன. 'தரும மூர்த்தி! தேவரீரிடம் அபயம் புக வந்துள்ளவன் அதி மதியூகி; இனிய குண சிலன்; பெரிய கருணையாளன், அரிய கவ ஒழுக்க முடையவன். இராவணன் பெற்றுள்ள வர பலங்கள் எல்லாம் இராம பானத்தின் எதிரே அடியோடு நாசமடைந்து போம் எனத் தெளிவாக முடிவு செய்துள்ளவன். இஅதிவரை யும் அண் னனுக்கு வேண்டிய உறுதி நலங்களை உரிமையுடன் ஒதி ன்ை; யாதும் பலன் காணுமையால் தீயவன் தொடர்பு தியது என்று வெறுத்து விலகிக் தனக்கு உய்தி நாடி ஈண்டு ஆர்வத் துடன் வந்துள்ளான். அடைக்கலம் என்று வந்தவனே ஆதரித் தருளுவது உயாநத கருமம. தேவர் முதல யாவராஅம செய்ய முடியாக அரிய பெரிய காரியத்தைச் செய்ய மூண்டு திரமாகத் துணிந்து நிற்கிற விர மூர்த்தியாகிய நீங்கள் ஆபத்து எ ன்று அஞ்சி வந்து அபயம் புகுந்தவனே நெஞ்சில் ஐயுறவு கொண்டு அயலே விலக்கி விடின் அது சிரிப்புக்கு இடமாம். பகைவர் என்று எவரையும் இகழ்ந்து விடலாகாது; உறவாப் ஒட்டியுள் ளவரே பகைவரினும் கொடியராய் இடையூறுகள் செய்ய நேர் இன்றனர். பகையினத்தைச் சேர்ந்தவர் உறவினரினும் உரிமை யாளராய் உதவிகள் புரிபவரும் உளர். பிறப்பு இருப்புகளைக் கொண்டு யாரையும் பிழையா எண்ணலாகாது. நேரில் கண்ட அனுபவங்களால் இவன் சீரிய செம்மையாளன் எனத் தெரிய வந்தது. இவனுடைய வாவும் உறவும் மைக்கு எவ்வகையிலும் பெரிய நன்மையாம் என்றே கருதுகின்றேன். ஆண்டவன் திருவுள்ளம் எப்படியோ அப்படியே ஆகட்டும்” என்.அ அதி == o, , " - -. * --- o விநயமாய் இப்படி அனுமான் பேசி முடித்தான்.