பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4065 உள்ள சாள்வரையும் உண்டு உவந்து வந்தவன் உற்ற சமையத்தில் உரிமையாப் உதவ வேண்டும் என நன்றியறிவை வெளிப்படுத்தி வென்றிவிருேடு கம்பியிடம் விளம்பியிருக்கிருன். உயிர் கொடாது அங்குப் போகேன். என்றது துயரோடு தொடர்ந்து காண வந்தது. எதிரிகளைக் கொன்று தொலைத்து வென்றியோடு மீளுவேன் என்று சொல்லவில்லை. வெல்ல முடியாது; சாகவே நேரும் என்று யூகம் செய்திருக்கிருன். அவ் வுண்மையை இவ்வுரை உணர்த்தி நின்றது. குறிப்புமொழி கூர்ந்து சிந்திக்க வந்தது. வென்று இவண் வருவன் என்று உரைக்கிலேன்.” என இராவணனிடம் முன்னமே குறித்து வந்திருத்தலால் ஈண்டும் அந்த ஐயமே மூண்டு நின்றது. நிலைமைகளை யெல்லாம் நிறை தினக்கி நோக்கி இறுதியான உறுதியுடன் உரையாடியுள்ளான். உண்ட சோற்றுக்கு உயிரைக் கொடுக்கவே உறுதிசெய்து வந்திருத்தலால் இவனுடைய நன்றியறிவும் உள்ளத் துணிவும் நேர்மையும் சீர்மையும் நேரே தெரிய வங்தன. தம்பியின் பால் அன்பு சுரத்திருந்தாலும் அவனுடைய வேண்டுகோளுக்கு யா தும் இசையாமல் தனது ஆண்மை நிலையிலேயே உறுதியாப் இவன் ஊன்றி நிற்பது ஆன்ற மேன்மை கிறைந்துள்ளது. பெற்ற தாயாள குந்தி வந்து பாண்டவர்களோடு சேர்ந்து கொள்ளும்படி கன்னனே வேண்டிய பொழுது அவன் மறுத்து கின்ற நிலையும் ஈண்டு இணைத்து எண்ண உரியது. தனக்குத் துரியோதனன் செய்து வந்த உபாகாரங்களை நினைந்து அவன் உருகி யிருக்கிருன். அம் மன்னனுக்கு உதவியாப்ப் போரில் கன்னன் மூண்டு நின்றபொழுது நேரில் சொன்ன வார்த்தை கள் சீரும் சிறப்பும் செறிந்து நீர்மை சுரந்து நின்றன. நஞ்சோற்றம் பெற நுகர்வுற் றிருண்ட கண்டர் நற்ருெண்டர் வடிவம் என கண்ணும் வெண்ணிற்று அஞ்சோற்று மடற்கைதை கமழும் கானல் அகன்குருநாட் டரிஏறே யானின் தீம்பால் வெஞ்சோற்ருேடு இனிதருங்தி அமுதருங்தும் விண்ணவர்போல் இங்கெடுங்ாள் விழைந்து வாழ்ந்தேன் 609