4,180 கம்பன் கலை நிலை எண்மையும் தண்மையும் இரக்கமும் உடையளாயிலு: அத்தார்த்தனுடைய புலைப்புன்மையை நோக்கி வன்மையான வார்த்தைகளை வாய்கூசாமல் நேரே வழங்க நேர்ந்தாள்.' காகம் வந்து மதுரமாற்றம் சொல்லுவ: துண்டத்தால் உன் கண்ணேக் கல்லுவ. உனது அழகிய வாயிலிருந்து அதி மதுரமான மொழிகளைக் கேட்க ஆவல் கொ ண்டுள்ளேன் என்று அப்பேயன் பிதற்றினல் ஆதலால் அதற்கு இத்தாயவள் இவ்வாறு எதிர் உரைத்தாள். Hof ஏதேனும் ஒர் இனிய சொல்லைச் சொல்லுக என்று என் சிைடம் வந்து பல்லைக் காட்டுகின்ருயே மடையா! உன்னிடம் வந்து உவந்து கூடி நேரே சொல்ல உரிய ஒர் இனம் தனியே உள்ளது; அதன்பெயர் காகம் என இங்கனம் காட்டியருளினள். i இராமபாணத்தால் அடிபட்டு இராவணன் போர்க்களத் தில் விழ்ந்து கிடப்பான்; காக்கைகள் வந்து கா கூ என்று கத்தி அவனுடைய கண்களை மூக்கால் கொத்திப் பிடுங்கிக் தின்னும் என்னும் அவலக்காட்சியை இங்கே கண்டு கவல்கின்ருேம். துண்டம்=மூக்கு. ஆசை நோக்கின் அழிவு நோக்க வங்கது. என்ஆன இச்சித்துப் பார்த்த கண்களைக் காக்கைகள் கொக் திப்பிடுங்கும் என்று இப்பத்தினி உள். ளம் நொந்து உருக்தச் சாபமிட்டபடியாய் இவ்வாசகம் ஈண்டு உருவாகி வந்துள்ளது. கமலக் கண்ணன் வில் உமிழ் பகழி கலப்பன. தன்னேடு கலந்து மகிழ வேண்டும் 3T 3RT அலங்த புலம்பிய அவனுக்குக் கலக்க உரியன இவை என்று இலக்கோடு எடுத்துக் கூறினுள். கூறிய உரைகள் கூரிய வசைகளாய்ப் பாய்ந்தன. i. செந்தாமரைக் கண்ணன் என இாளை இங்கே குறிக்கத அந்தக் கண்ணழகன் கண்டு களிக்க வுரிய பெண்ணரசியை மண்ணுய் மடிய நேர்ந்துள்ள அரக்கன் எ ண்ணிையுழல்வது ஈன மயல் என்பது தெரிய வந்தது. கமலம்= காமரை. நீரில் மலர்வது எனக் குறியாய் அமைக்கது. நீர்மை கோய்ந்து சீர்மை வாய்ந்து ள்ள அந்தக் கமலக் கண்களையே ைேகயின் உள்ளக் கமலம் கருதியுள்ளமையை இவ் வுரை யால் உணர்ந்து கொள்ளுகிருேம். அயலான் மயலோடு கன்னே விழைந்தான் ஆதலால் அந்தத் தீய நெஞ்சைத் தூயவன் பகழி மாய நா. அழித்து ஒழிக்கும்
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/224
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை