பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4:210 ചേഒ 8 സെ அசகாயகுரளுப் அதிசய நிலையில் அடல் மீறியுள்ள கும்பகரு னனைக் கண்டு இவனே வெல்ல முடியுமா? என்று கலங்கியிருந்த அந்தக் கலக்கம் நீங்கவே இந்தக் குலமகள் உள்ளத்தில் உவகை பொங்கி ஓங்கி எழுந்தது; அகத்தில் பெருகிய அம்ப கிழ்ச்சிப் பெருக்கு புறத்தில் பொலிந்து விளங்கியது. அதிசயமான அவ் விளக்கத்தைக் கவி சுவையாக விளக்கி யருளினர். மூண்ட மாயம் முடிந்து போயது. H 'காமாசையால் இன்பக்கனவு கண்டு வந்த இராவணன் துன்பத்தில் ஆழ்ந்து துடித்துப் புலம்பிச் சோகமாய்ப் போயி குன்; தந்தை என்று நோக்கிக் கவிக்கப் பகைக்க சீதை உடனே மாறி உள்ளம் உவந்து இன்பவெள்ளத்தில் இருந்தாள். சுகதுக் கங்களின் சுழல்கள் அதிசய நிலையில் தோன்றி விதிவிளைவுகளை விளக்கி வித்தகவினேகங்களாய் இங்கே விளங்கி நிற்கின்றன. அசோகவனத்தைப் பிரிந்து அதிசோகமாய் இராவணன் அரண்மனையை நோக்கிப் போளுன்; சனகனைப் போல் மாய வஞ்சமாகக் கொண்டு வந்திருந்த அந்தக் கள்ள வேடனே வேறு ஒர் இடத்தில் தனியே சிறை வைக்கும்படி சீதை கேட்குமாறு விரகோடு கூறி விட்டு மகோதரன் அயலே அகன்று போனன். இயசூழ்ச்சியோடு செய்த மாயத் தீமைகள் தீர்ந்து போகவே இராமனை நினைந்து மகிழ்ந்து சீதை தனியே அமர்ந்திருந்தாள். வெற்றி விரன் போர்க்களம் புகுந்து பகைவர் இனத்தை அழித்துக் கொற்றம் புரிந்து வருகிருன் என்பதை முற்றும் தெரிந்து அதனையே எண்ணி எ ண்ணி இன்பம் மீதுார்ந்தாள். கெண்டைத் தடங்கண்ள்ை உள்ளே கிளுகிளுத்தாள். என்றது ைேதயின் உவகை நிலையை உள்ளம் ஊன்றி உணர்ந்து கொள்ள வந்தது. கிளுகிளுத்தல் என்பது மகிழ்ச் ைெய உணர்ச்சியோடு குறிக்கும் ஒர் ஒலிக்குறிப்பு. எதிர்பா 『T点 ஆனக்கத்தால் உள்ளம் துள்ளிக் குது.ாகலித்துள்ளதை இந்த ஒலிக் குறிப்பால் கவி உணர்த்தி யருளினர். உரிய இடங்களில் அரிய பிரயோகங்கள் பிரியமாய் மருவி இனிதே வருகின்றன. திரிசடை தேற்றியது. பெரிய தங்தை மாயவஞ்சனைகளோடு அகியாயமாய் வக்க