பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4,273 'வருபவன் யார்?' என்று அருகேயிருந்த விபீடணனிடம் கேட் டான். அவன் யாவும் விவரமா விளக்கி நேரே சொன்னன்.

வீரவெந்தொழிலினன் என இலக்குவனே இங்கே குறித்தி ருப்பது இவனது நீர்மை நிலைமைகளை கெடிது தெரியவந்தது. போராடலை உல்லாசமான விளையாடலாகவே கருதி உவந்து உறுதி குழ்ந்துள்ளான். தன்னை எவரும் வெல்லமுடியாது; கான் எல்லாரையும் எளிது வென்று விடலாம் என்னும் விரத்துணிபு இவன் உள்ளத்தில் விறுகொண்டிருத்தலை உரையும் செயலும் துறைகள் தோறும் உணர்த்தி உறுதி கூர்ந்து வருகின்றன.

பகை இனத்தைப் பாழாக்கி அண்ணியை மீட்டி அண் னனே மகிழவைக்கவேண்டும் என்றே கண்னும் கருத்துமாப் உறுதிபூண்டு உழைத்துவருகிருன். பொருமுறைகிடைத்தபோது பெருமகிழ்ச்சி யடைகிருன். ஒருவனை வெல்லவந்தவன் பலரை யும் வெல்ல விழைந்து விறுகொண்டு தேறி கிற்கின்ருன். அங்கிலையில் வருபவனுடைய நிலைமையை விளக்கித் தலைமை யைத் துலக்கி விபீடணன் உரையாட நேர்ந்தான். ஆரியl என்று விளித்தது சீரிய மேன்மை வாய்ந்துள்ளவனே! என்று கூறிய படியாம். நீதிமுறை தழுவித் தருமநெறி ஒழுகிக் கருமம் புரிந்து வரும் காரிய நீர்மை ஆரிய' என்றதஞல் அறிய வந்தது. நேர்ந்த பகைவரை நிலைகுலைத்துச் சார்ந்த அணேவனுக்கு ஆர்க்த வெற் மியை அருள இக்கொற்றக் குரிசில் ஒர்ந்து வினை புரிந்து வருகி முன். கருமத் துணைவனப் உரிமை கூர்ந்துள்ள விடனன் இத் தருமத் தம்பிக்கு எதிரியின் மருமங்களையெல்லாம் வகைதொகை யாகவரைந்து விளக்கினன்: ' 'பொருவருபொருக! இதுபொழுது இங்கே போருக்கு வருபவன் யாருக்கும் அடங்காத அதிசய வீரன். தேவருலகை வென்று தேவர்கோஜனக் சிறைபிடித்து வங்தவன். இலங்கை வேங்தனுடைய தலைமைப் புதல்வன். இந்திர சித்து என்னும் பேரினன். மந்திர சித்திகள் வாய்ந்தவன். வில் லாடலில் எல்லையில்லாத வலியினன். எவ்வழியும் வெற்றியே கண்டவன். அவன் உக்கிர வேகமாய் உருத்து மூண்டுவருகி முன்; கடும்போர் நேர்ந்துள்ளது; நாம் தனியே கின்று எதிர்க்க லா காது; தக்க துணைகளோடு சேர்ந்தே தாக்கவேண்டும்; வரு கிறவன் போர்வீரத்தோடு அரிய பல மாய வேலைகளிலும் வல்ல 535