பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4286 கம்பன் கலை நிலை வியந்திருந்தான். பிறக்க துணைவர்களுள் பரதன் சிறந்தஉத்தமன்; அவனைத் தனக்குக் கம்பியாகப் பெற்றிருப்பது இராமனுக்கு ஒரு பெரிய பேரும் என நினைந்திருந்தான் ஆதலால் அந்த நினைவு கிலை உரையில் வெளிவர நேர்ந்தது. பகையாளிகளும் பரதனை உவகையாக விழைந்து கொண்டாடி வருவது அவனது அரிய பெரிய நீர்மைகளை உலகம் அறிய விளக்கியுள்ளது. மறைந்துகின்று கன்மேல் அம்பை ஏவிய இராமனேநோக்கி வாலி சினந்து பேசும்போது நீ பரதன் முன் தோன்றிஞயே இந்தத் தீமையைச் செய்யலாமா?’ என்று பரிந்து கேட்டிருக் கிருன். அந்தக் கேள்வி நிலை இங்கே அறிந்து கொள்ளத்தக்கது. பரதன் முன்னேன் இராமன்; அவனுடைய தம்பி இலக்கு வன்; சிறிய தம்பி சத்துருக்கன் ஒருவன் இருக்கலால் இவனைப் பெருந்தம்பி என்ருன். பெருமை முறைமை நோக்கி எழுந்தது. சீதையை இராவணன் கவர்ந்து வந்ததிலிருந்து இராமன் முதலாக அந்த அரசகுடும்பத்தாரை இலங்கையின் அரச குடும் பத்தார் நன்கு விசாரித்து அறிந்துள்ளார் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுகிருேம். இந்திரசித்து உரைஅக்தரம்அருளியது. படைகள் சூழ்ந்தது. போர்மேல் மூண்டு சென்ற இலக்குவனே ஒற்றணிடம் உசாவி அறிந்த இந்திர சித்து அவனுடைய உருவ அழகைஉவங் து நோக்கினும் தன் தம்பியைக் கொன்றவன் என்ற கோபத்தால் கொதித்து கின்ருன். விர வெறியோடு போர்வேட்டு அவ்வாறு அவன் தேர்மேல் கிற்குங்கால் பார்மேல் படர்ந்திருந்த சேனைக் திரள்கள் இளையவனே இடையே அடைய வளைந்துகொண்டன. தியவன் இளவல்தன்மேல் செல்வதன் முன்னம செல்கென்-அறு ஏயினர் ஒருவர் இன்றி இராக்கதத் தலைவர் எங்கள் நாயகன் மகனே க் கொன்ருய் கண்ணினே நாங்கள் காணப் போயினி உய்வது எங்கே? என்றெரி விழித்துப் புக்கார். இந்திரசித்தோடு போருக்கு விரைந்து இலட்சுமனன் வக் தபோது இடையே இராட்சசசேனதிபதிகள் வளைந்துகொண்ட கிலையை இது காட்டியுள்ளது. உள்ளம் கொதித்து உருத்து மூண்டு அவர் கடுத்துச்சூழ்ந்தது அடுத்து விளைவதைத்தொடுத்து விளக்கியது. பழிவாங்கும் குறிப்பு மொழியில் விளங்கியது.