பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4443 இறுதியில் செய்ய விபீடணன் ஒருவன் - உறுதியாயிருக்கிருன்; உன் தக்கைக்குக் கொள்ளிவைத்து நீ அவனுக்கு உரிமையோடு செய்யவுரிய கருமக்கடனை உனக்கு அவன் செய்ய நேர்ந்துள் ளான்; சாவின் வாயிலேயே மேவி நிற்கின்ற நீ உனது நிலை மையை ஒரு சிறிதும் உணராமல் பல பல புலம்புகிருய்; பாழ் வாப் திறந்து பயன் இல்லாத மொழிகளை விரித்துப் பேசுவதை விடப் பயனுடைய காரியத்தை விரைந்து செய்து இறந்துபோ; நேரத்தை வினே கடக்காதே! நேர்ந்து போர் செய்! சொல்லா டலே நிறுத்தி வில்லாடலை ஒல்லையில் தொடங்குக' என்று இவ்விர இளவல் கூறி விர கம்பீரமாய்த் தன்வில்லில் கைவைத்துகின்ருன். சொல்லில் மிகவும் வல்லவ்ன்போல் வீறுகொண்டு அவன் பல வார்த்தைகள் பேசினன், இவன் சில சொல்லால் மாறு கூறி வாயடக்கிப் போருக்கு விரைந்து நேருக்கு நோய் நிலை தெரிந்து நின்றது கலை நிறைந்த காட்சியாய்க் காணவந்தது. நுங்தைக்கு நீ செயக்கடவன கடன்கள் உனக்கு அவன் செயும். -- இந்த வார்த்தை எவ்வளவு கிக்கையில் வந்துள்ளது. சிந்தனை செய்யவேண்டும். இந்திர சித்து முக்தி மொழிந்ததற்கு இந்த மொழி எதிர்மொழியாய் வந்து அதிசயவீருேடு நிமிர்ந்துகின்றது. உனக்கு முன்னே சாக வுரிய உன் அண்ணனைப் பின்னே கொல்லுவேன்; பின்னே இறக்க வுரிய உன்னே முன்னே தொலைத்து ஒழிப்பேன்; முறைகேடான அந்தச் சாவுகளே விரை வில் செய்வேன் என்று அவன் விரவாதமாய்ப் பேசின்ை ஆத லால் அதற்கு 'எதிராக இலக்குவன் இங்ங்னம் இசைத்தான். o விரைந்து செத்துப்போக சேர்ந்துள்ள இப்படிப் பித்தே றிப் பேசுகின்ருயே பேதையே! பேச்சை நிறுத்து; போரைச் செய் என்று இம்மேதை பேசியுள்ளது விசயம் மிக வுடையது. உன் தகப்பனுக்கு முன்னதாக நீ சாகவந்துள்ளாய்; அக் தச்சாவு நிலைதெரியாமல் விவேக சூனியமாய் வீ. பேசுகிருயே! என மாறு கூறி இவ்வீரன் இர ங்கியிருக்கிருன். அடங்கொண்டு அவன் ஆங்காரமாய்ப் பேசினன்; அதன்ைமறுத்து இவன் அமை தியாய்ப் பதில் உரைத்தான். உரைகள் நுனித்து உணர்வுரியன.