பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4449 அண்டம் உண்டதன் வாயில்ை ஆர்மின் என்று அருள விண்டது அண்டம்என்று உலந்திட ஆர்த்தனர் வீரர். (2) மண்ணிமைப்பதன் முன்புபோய் விசும்பிடைக் கரந்தான் அண்ணல் மற்றவன் ஆக்கைகண்டறிகில கிைப் பண்ணவற்கு இவன் பிழைக்குமேல் படுக்கும்.நம் படையை ாண்ணமற்றிலே அயன்படை தொடுப்பல் என்று இசைத்தான். போராடிவந்த இந்திரசித்து தேர் உடைந்து சீரழிந்து மாறு வேறு செய்ய முடியாமல் விரைந்து வானில்போய் மறைந்து கொண்டான். கொள்ளவே இலக்குவன் பிரமாஸ்திரத்தைத் கொடுத்து அவனை அழித்து வீழ்த்தவேண்டும் என்று துணிக் தான். தனது உள்ளத் துணிவை அண்ணனிடம் உரிமையோடு உரைத்தான். அந்த வீர வள்ளல் நீர்மையோடு நேரே தடுத்தான். கமலக்கண் கலுழ; நிலவுஎன முறுவலும் தோன்ற. இளையவன் இந்திரசித்தின் கவசத்தை உடைத்து வில்லைக் குணக்தொனி செய்து வெற்றிவிருேடு நின்றதைக்கண்டபோது இராமன் உள்ளம் உவந்து களித்துள்ள நிலையை இது உணர்த்தி புள்ளது. உழுவலன்புகள் விழுமிய நிலைகளில் விளங்கி நின்றன. பல்லாயிரம் படைகளோடு வந்த பொல்லாத எதிரியோடு தன்னம் தனியே மூண்டு வில்லாடல் புரிந்து எல்லாவழிகளிலும் சாரி திரிந்து யாண்டும் அம்புகளைக் கடுத்துக் கொடுத்து வெல் டிங் திறலில் வீறுகொண்டு நிற்கும் கம்பியின் வித்தக நிலையை நோக்கி இவ்வுத்தம வீரன் பேரானந்தம் அடைந்திருக்கிருன். அந்த ஆனந்த பரவசத்தால் செக்தாமரை மலர்போன்ற கண்க விருந்து நீர் பெருகி நின்றது. அன்பின் பெருக்கையும் ஆனந்தப் பெருக்கையும் கண்ணின் பெருக்கு விண்னும் மண்னும் அறிய ாண்டு விளக்கியுள்ளது. கண்ணும் முறுவலும் காட்சிக்குவந்தன. இந்திரசித்து வெற்றிச்சங்கை முழக்கியபொழுது கோதண் டவிரன் சிறிது சீற்றம் கொண்டான்; அடுத்து இலக்குவன் வெற்றிகொண்டதைக் கண்டதும் அவனுடைய வில்லாடலின் வேகக்கையும் வித்தக நிலையையும் வியந்து உவந்தான். அந்த அகத்தின் உவகையை முகத்தில் தோன்றிய நகை நன்கு விளக்கி நின்றது. கம்பிதிறத்தைநினைத்துகம்பிமகிழ்ந்ததுநயமிகவுடையது. 557