4474 கம்பன் கலை நிலை முன்பு அவன் கேட்டான் ஆதலால் அகற்குப் பதில் இவ்வாறு வந்தது. ஒற்றர் ஒற்றி அறிந்துள்ளது உரைக்க நேர்க்கது. GNU/TS, TII சேனைகளுக்கு உணவு வகைகள் கொண்டுவரும் பொருட்டு அவன் அயலே அகன்று போயிருக்கலை அறிந்து வந்துள்ளமையால் விவரமாக விளக்கி உரைக்கார். வீடணன் என்று பகைமை நோக்கோடு இந்திரசித்து கேட்டாலும் தாகர் தகைமையாகவே அவன் எதிரே பதில் கூற நேர்ந்தார். உங்தை எனச் சொந்தம் பாராட்டி இங்கவாறு அவர் குறித்துள்ளமையால் அந்த மதிமான்மீது அவர் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையும் தெரிய வந்தன. அரச குடும்பத்தில் பிறக் துள்ள வரிசைத் தம்பி ஆதலால் பொதுமக்கள் அவன்பால் போன்போடு பெருகி ஆர்வம் கூர்ந்துள்ளனர். சிறிய தங்தை என்று சிறிதும் மதியாமல் வீடணனை இந்திர சித்து வெறுத்து வெகுண்டிருந்தாலும் அதனே யாதும் பொருட் படுத்தாமல் தாகர் ஆக வோடு பேசியிருப்பது அவரது அரச பத்தியையும் உறுதி நிலையையும் வெளிப்படுத்தி நின்றது. இன்னவாறு அங்கு உள்ள நிலைமைகளை அவர் சொன்ன போது பின்னும் சில கேட்டான். முடிவில் மகோகான விசா ரித்தான். கெடிய படைகளோடு பெரிய சேனைத் தலைவனுய்க் சென்றவன் ஆதலால் அவனது நிலைமையை நேரே அறிய விரும் பினன். சேனைகள் எல்லாம் காசமாயழிந்து போகவே அவன் ஒடி விரைந்து வானில் மறைந்துகொண்டான் என்று அவனது இருப்பைத் தாகர் குறிப்பாக உரைத்தார். அதனைக் கேட்டதும் மேகநாதன் அவனே எள்ளி இகழ்ந்துவிட்டுத் தான் கருதிய க - மத்தை அதுபொழுதே அதிவேகமாய்ச் செய்ய விரைந்தான். யாகம் புரிந்தது. பகைவரை ஒருங்கே வென்று தொலைக்க வேண்டும் என்று உறுதி பூண்ட இந்திரசித்து அதற்கு வேண்டிய மூல வேள்வி யைக் காலம் கருதிச் செய்ய நேர்ந்தான். இலங்காபுரியின்தென் பால் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அந்த யாகத்தைச் செய் தான். மாரணங்களே நன்கு தெரிந்த மந்திரவாதிகள் பலர் குழ்ந்து கின்று ஆரணங்கள் ஒதக் காரணங்களை நினைந்து கால
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/133
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை