பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4495 இரங்கியழும்படி செய்திருக்கின்றன. க்கக்கும் நலமாய் இதம் புரியவந்த இனியவன் என்று இப் புண்ணிய விரனே அவை எண்ணியிருப்பது போல் நுண்ணிதாய்த் தெரிய வந்துள்ளது. ստ பாவங்களை ஒழியாமல் செய்து மேலும் மேலும் சே மாப் விருத்தியடையாமல் இடையே தம்மை நாசப்படுத்தி நன் மைபுரியவந்த தன்மையாளன் எனப் பகையும், பாவமும் இரா மனே மருமமாக் கருதியிருக்கலால் இவனுக்கு நேர்ந்த, அல்லலில் அவை பரிவுகூர்ந்து கலுழ நேர்ந்தன. நேர் விரோதிகளும் பகை மையுணர்ச்சி மாறிப் பண்பு சுரங்து இராமனிடம் அன்பு புரிந்து ஆர்வம் கனிவார் என்னும் அதிசயம் இங்கே அறிய வந்தது. கருணையால் பிறந்தான். தம்பி இறந்துபோனன் என்று கலங்கி அழுதவன் யார்? என்பதை இங்கனம் வரைந்து காட்டியிருக்கிருர். கரும நீதிகளை யும் நல்லவிர்களையும் இனிது பாதுகாக்கவேண்டும் என்னும் கருணையினல் இவ்வுலகில் வந்து அவதரித்துள்ளவன் என அவ னது உண்மை நிலையை நுண்மையாக ஈண்டு உணர வுரைத்தார். இன்பமயமான பரமபத நிலையைவிட்டுத் துன்பவுலகில் தோன்றியது ஆன்ற அருளினலேயாம். அருளால் பிறந்தவன் தனது இயல்பின மறந்து பிறவித் துயரங்களை அனுபவிக்கநேர்ந் ான். எல்லேமீறிய தின்பத்தால் உள்ளம் கலங்கி உயிர்பதைக்க அல்லலுழந்து அலமந்து கிடந்தான். உயிர் உடலைவிட்டுப் போக வில்லை என்ற அந்த நிலையுைத்தவிர வேறு எல்லாத் துயரங்களை |ம் அடைந்து தவித்தான். அந்தப் பரதவிப்புகள் தன் கம்பிமீது இங்கம்பி கொண்டுள்ள வாஞ்சைகளை வையம் அறியச்செய் அன. உரிய துணைவன் மீது உயிர் உருகி ஒருமையாய் மருவியது. எழுந்து புலம்பியது. இளவலைக்கழுவி இங்கனம் மறுகி மயங்கி உருகி உயங்கிக் _ந்தவன். சிறிது தெளிந்து கண்விழித்து எழுந்து அருகே மர்ந்து கம்பியின் உடலைத் தடவி உயிர்நொந்து புலம்பினன். பாக் துடிப்புகளால் துவண்டு புலம்பிய உரைகள் அவலக் கேளாய்த் திரண்டு வந்தன. அயலே வருகின்றன. காண்க. -