பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4509 னெந்து துதித்தார். வானவர் வாழ மானவர் உருவில் யாதொரு உருவும் இல்லாதவன் மருவி வந்துள்ளான் என்னும் மருமம் இங்கே தெரிய வந்தது. அருவப் பொருள் உருவம் பூண்டுள்ளது. எம்மேல் கருணையில்ை இயையா உருவம் இஃது எய்தி. தம்பியின்மேல் சோகமாய் மயங்கிக் கிடப்பவனே நோக்கித் தேவர் இவ்வாறு சோகித்துப் புலம்பியுள்ளனர். அரக்கர்கள் இழைத்துவரும் இடையூறுகள் எங்களால் பொறுக்க முடிய வில்லை; ஆண்டவனே போருள் புரிந்து விரைந்து எங்களைப் பாது காக்கவேண்டும்' என்று தேவர்கள் முன்பு திர ண்டு வந்து வருக்தி வேண்டியதனுலேயே திருமால் இராமன் çi] GRIT ஈண்டு அவதரித்து வந்துள்ளான். அங்க உண்மையை நினைந்து நெஞ்சம் உருகி அஞ்சலி செய்து அவர் இங்கனம் உரைத்து நின்ருர். இயையா உருவம் என்றது யாதொரு வடிவமும் இல்லா மல் காற்றைப்போல் எங்கும் அருவமாய்ப் பரவியுள்ள பரமன் அமரரை ஆதரிப்பதற்காக் ஒர் உருவம் அமைந்து வந்திருத்த லால் அதன் அருமை பெருமைகளையும் கரும நிலைகளையும் கருதி உரைத்தார். கருமம் காக்க வந்தவன் என மருமம் துலக்கினர். புரக்கும் மன்னர் குடி என்றக இராமன் பிறந்துள்ள குலத் நின் பெருமையைக் கூர்ந்துணர வந்தது. உலகையும் உயிரினங் களேயும் வழிமுறையே கலமாகப் பாதுகாத்து வந்த விழுமிய குடியில் அவதரித்தது, தான் கருதி எழுந்த கருமம் இனிது முடி பும் என்னும் கருத்தால் அமைந்தது. காரிய சிக்திக்குக் தகுந்த படி வீரியமான விழுமிய குடியில் விரைந்து பிறந்தான். வான்குடி வாழக் கோன்குடி வந்த வள்ளல். f ான இராமனை உள்ளம் உருகி உலகம் துதித்து வருதலால் அவன் வங்க வரவும் இருந்த இருப்பும் செய்த காரியங்க ளும் உப்தி நிலை களும் உணர வந்தன. எ ண்ணியபடி சிறந்த குடியில் பிறந்தவன் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் ஒருங்கே புர க்தருளப் பெருங் காரியங்களைச் செப்து வருகிருன். அரிய வினையாண்மை பில் உரிய ஊழ்வினையும் இடையிடையே புகுந்து விளையாடி வரு விறது. அந்த விளையாட்டில் பிறப்பின் கிளையாட்டங்கள் பல வ ர்ந்து திகழ்கின்றன. அரிய வரவு செலவுகள் அறிய வந்தன.