பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4558 கம்பன் கலை நிலை சூடாமணி நிகண்டு ஆசிரியரான மண்டல புருடர் இந்த மருந்து களைக் குறித்துச்சொல்லியுள்ளதையும்.அயலே காணவருகிருேம். வல்லியும் புல்லும் பூடும் மரமுதல் மருந்து என்ருகும்; சல்லிய கரணி கூர்வேல் தைத்தபுண் மாற்றும் துண்டம் , புல்லிய செய்வ தானே சந்தானகரணி போலும்; மெல்லிய இரணம் இர்க்கும் சமனிய கரணிவேறே. மறைவிலா மிருதசஞ்சிவனியுடன் அமுது இரண்டும் குறைவற மூர்ச்சை தீர்த்தே குற்றுயிர் தருமருந்தாம். (கிகண்டு) இவை ஈண்டு எண்ண உரியன. மேலே வந்துள்ள மருந்து நிலை களை இதன் கண்னும் அறிந்துகொள்ளுகிருேம். இத்தகைய விே யமருந்துகளைத் தெளிவாக விளக்கி வழி விவரங்களையும் துலக்கி அருளோடு சென்று வரும்படி வாழ்த்தி விடுத்தான். பொய் மருங்கும். இல்லாதாய்! என அனுமான இவ்வாறு குறித்திருக்கிருன். பொய் இவன் அருகேகூட அணுகியிராது என்ற கல்ை மெய்யை இவன் பேணி வந்திருக்கும் மேன்மையும் பான்மையும் கெரிய நின்றன. 'நீ சத்திய விரதனை உத்தமன்; உனக்கு எங்கக் காரிய மும் எளிதே கைகூடும் எனத் தெளிவுகூறிக் கேற்றி விடுக்க படியாய் இவ்வார்த்தை ஈண்டு வந்துள்ளது. காரியத்தில் ஊக்கி விடுகின்ருன் ஆகலால் சீரிய குறிப்பு சிறப்பாய் எழுந்தது. சக்திய லேனிடம் அற்புத சக்திகள் அமைந்திருக்கின்றன. அவன் கருதியது.எதுவும் இன்னிது முடிந்து வருகிறது. புனிதமான பெரிய நீர்மைகளுடையவரே அரிய காரியங்களை ஆற்றிவர GP12யும் என்னும் முடிவு தெரிய இம் மெய் மொழி ஈண்டு மூண்டு வந்தது. வேண்டிய கருமத்தை முடித்து அதிசய சித்தியுடன் மீண்டு வரவுரிய ஆண்டகை என அனுமான அவன் வேண்டி நின்ருன். அவ் வேண்டுகோள் விநயம் தோய்ந்து வந்தது. குறித்த மருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள் ளது. மேரு முதலிய பாரமலைகள் பலவும் கடந்து அப்பால் செல் லவேண்டும்; மனித சஞ்சாரம் இல்லாதது; வன தேவதைகள் கடுமையான காவலுடையது; அடுதிறலுடைய நேமி ஒன்று