7. இ ரா ம ன் 4571 o * - மூர்ச்சை தெளிந்த பின் இராமன் உரியவர் இருவரையும் பரிவோடு பார்த்துப் பரிதாபமாய்ப் பேசினன்: கொடிய முடிவு நேர்ந்துவிட்டது; இனிமேல் நாம் முடிவாகச் செய்ய வேண்டியது என்ன?’ என்று இந்த ஐயன் அவலத் துயரோடு பேசியது நேர்ந்துள்ள கவலை நிலைகளை நேரே காட்டி நின்றது. - *. *. இராமன் பேசியது. - - ஐயன்மீர் நமக்குற்ற அழிவு இது ஆதலின் செய்வகை பிறிதிலே உயிரில் தீர்ந்தவர் உய்கிலர் இனிச்செயற்கு உரியது உண்டு எனின் பொய்யிலர் புகலுதிர் புலமை உள்ளத்திர் ! (1) சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய பேதை என் சிறுமையால் உற்ற பெற்றிமை யாதென உணர்த்துகேன் உலகொடு ஈர்வுருக். காதைவன் பழியொடு திருத்திக் காட்டினேன். (2) மாயையின் மான் என எம்பி வாய்மையால் து.ாயன உறுதிகள் சொன்ன சொற்கொளேன் போயினன் பெண்ணுரை மருது போகலால் ஆயது இப்பழி யுடை ஆணி அன்பீனிர் (3) கண்டனன் இராவணன் தன்னேக் கண்களால் மண்டமர் புரிந்தனன் வலியில்ை உயிர் கொண்டிலன் உறவெலாம் கொடுத்து மாள நான் பண்டுடைத் தீவினை பயந்த பண்பில்ை. (4) தேவர்தம் படைக்கலம் தொடுத்துத் தீயவன் சாவது காண்டும் என்று இளவல் சாற்றலும் ஆவதை உணர்ந்திலன் அழிவது என் வயின் மேவுதல் உறுவதோர் விதியின் வெம்மையால். (5) கின்றிலன் உடன்எறி படைக்கு நீதியால் ஒன்றிய பூசனே அமைக்க உன்னினேன் பொன்றினர் நமர்எலாம்; இளவல் போயின்ை; - வென்றிலன் அரக்கனே வினேயின் வெம்மையால். (6) ஈண்டிவண் இருந்திவை இயம்பும் ஏழைமை வேண்டுவ தன்றினி அமரின் வீடிய ஆண்டகை அன்பரை அமரர் நாட்டிடைக் காண்டலே நலம் பிற கண்ட தில்லையால். (7)
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/230
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை