பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,593 னத்தில் ஓங்கி கின்றது. ஆதலால் எல்லை மீறிய களிப்புகளை எங் கும் விளைத்துப் பொங்கிய தலைமையில் அவன் இறுமாந்திருந்தான். தன்னையும் கடந்து நீண்ட உவகையன். இராவணன் அது பொழுது அடைந்திருந்த உவகை நிலையை இதல்ை உணர்ந்து கொள்ளுகிருேம். பெரிய குடிவெறி யன் போல் அரிய வெற்றி வெறியில் கெடிது மயங்கித் தலை கால் தெரியாமல் நிலைநீண்டகளிப்பால் திமிர்கொண்டு கின்றுள்ளான். அந்த உண்மையை இந்த உரை இங்கு நன்கு உணர்த்தியுள்ளது. எதிரிகள் தொலைந்து போயினர்; இனி யாதொரு கவலையு மின்றிச் சுகமாய் வாழலாம்; பழையபடி மூவுலகங்களும் வணங்கி ஏவல் புரிய ஆட்சியை மாட்சியா நடத்தலாம் என்று மகிழ்ச்சி மீதுார்ந்து கின்றமையால் உள்ளக் கிளர்ச்சிகள் பல் வகை ஆடல்களில் படிந்து வெள்ளப் பெருக்காய் விரிந்து நின்றன. ஊர்வசி, திலோத்கமை முதலிய தேவ மாதர் திவ்விய நடனங்கள் புரிவதைக் கண்டு எவ்வழியும் விழி பரப்பி இன்பக் களியனயிருந்தான். அந்த இருப்பு ஆனந்த வெறியாய் கின்றது. இலங்காபுரி எங்கனும் களியாட்டங்கள் பெருகி யிருந்தன ஆதலால் அரக்கர் திரள்கள் அங்கங்கே ஆனந்த ஆரவாரங்களில் திளைத்து உலாவினர். உயர்ந்த மது வகைகளை அருந்தி உல்லாச வினுேதங்களில் களித்து வந்தனர். ஆண் பெண் இரு பாலாரும் குடி வெறிகள் மீறிக் காமக் களியாட்டங்களை யாண்டும் புரிந்த னர். மது வெறியால் மதி மயங்கினமையால் விதி நியமங்கள் யாதும் தெரியாமல் மையல் மோகங்களில் வெய்ய போகிகளாய் விரிந்து திரிந்தனர். உள்ளக் களிப்புகள் யாண்டும் ஓங்கிகின்றன. ாற்பெரும் கல்விச் செல்வ நவையறு நெறியை நண்ணி முற்பயன் உணர்ந்த அாயோர் மொழியொடும் பழகி முற்றிப் பிற்பயன் உணர்தல் தேற்ருப் பேதைபால் வஞ்சன் செய்த கற்பனே என்ன ஒடிக் கலந்தது கள்ளின் வேகம். கள் உண்ட வெறி அரக்கரிடம் பரந்திருந்த நிலையை இது வரைந்து காட்டியுள்ளது. நல்ல கல்வியறிவுடைய மேலோர்க ளின் சொல்லைக் கேட்டுத் தெளிந்து கொள்ளாத பேதைகளிடம் திய வஞ்சகன் புரியும் மாய மயக்கம்போல் கள்ளின் வேகம் நிருதரிடம் செடிதுபரவிக் கடிதுநீண்டுயாண்டும்கலித்துகின்றது. 575 - -