பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,596 கம்பன் கலை நிலை வெற்றிவிழாவின் களியாட்டத்தில் விழியூன்றி அமரர் மங்கையர் நடனங்களைக் கண்டு தமர்களோடு இராவணன் களித் لالا -gا,یپ திருந்தான் ஆதலால் அது பொழுது அங்கே வந்த ஒற்றர்கள் திகைத்து நின்ருர். பொருகளத்தில் இறந்து கிடக்க வானா சேனைகள் எழுந்துகொண்ட நிலையைத் தங்கள் சக்கரவர்த்தி யிடம் வெளிப்படையாய் எப்படிச் சொல்வது? என்று வெப் போடு மறுகி நின்ருர். பின்பு துணிவு கொண்டார்; வண்டு ഉ-ത്ര வங்களாய் மருவிப் பறந்துபோய் இராவணன் அணிந்துள்ள பூமாலையில் படிந்தனர்; படிந்தவர் செவியருகே சென்று கவிகள் எழுந்துள்ள வகையைத் தொகையாகமெல்லஓதி ஒல்லைமீண்டார். அலங்கல் மீது ஏறினர் போய் ஊதிர்ை என்றது ஒற்றர் உருமாறிப் புகுந்து உற்றதை உரைத்திருக்கும் வித்தக நிலையை வெளிப்படுத்தி நின்றது. வேய்கள்=உளவுகளை ஒர்ந்து வந்து கூறுகின்ற ஒற்றர்கள். கருதிய உருவங்களைக் கருதியபடியே மருவிக்கொள்ளும் காமருபிகள் ஆதலால் இங்கே வண்டு வடிவம் கொண்டு போயினர். பூமாலையில் ஏற ஆமாறு அமைந்தனர். அமரர் முதல் பலரும் குழுமியுள்ள அரசவையில் அயலார் யாதும் அறியா வகை அரசனிடம் அதி மருமமாய் வேவுகாரர். மேவி ஊதி உணர்த்தியிருக்கின்றனர். பகைவருடைய எழுச்சி நிலையை வெளிப்படையாய்ச் சொல்லின் விபரீதமான வெட்கக் கேடுகள் ஆகும் ஆதலால் அதி இரகசியமா யுரைத்தார். இத்தகைய சதுரர்கள் இராவணனிடம் ஒற்றர்களாய் அமர்ந்துள்ளனர் என்பதை இங்கே உய்த்துணர்ந்து கொள் கின்ருேம். அதிசயமான மாய வல்லவர்கள் பலர் எவ்வழியும் உரிமையோடு அரிய காரியங்களைச் செய்து வருகின்றனர். அரசனுடைய கருத்து குறிப்பு பார்வை முதலிய நிலைகளை யெல் லாம் நன்கு தெளிந்துள்ளவர் ஆதலால் எங்கும் அவனுக்கு இதங்களே புரிந்து உற்ற வினையாளராய் ஒற்றர்கள் உயர்வு பெற்று நின்றனர். எதிரிகளின் வெற்றியை இகமா விளக்கினர். பகைவர் தொலைந்தார் எ ன்ற மகிழ்ச்சியில் தினத்திருந்த இராவணன் ஒற்றர் வந்து உற்றதைச் சொல்லவும் உள்ளம் திடுக்கிட்டுக் கலங்கினன். நெஞ்சத்திகில்நெடிய திகைப்பர்யது.