பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4,619 அழுகின்றன. இந்த நிலையை உணர்ந்தாவது நெஞ்சம் கொஞ் சம் இரங்கிக் கொலையை நீங்கிக் குணவானப் ஒதுங்கி விடு. மண்குலைகின்றது; விண்குலைகின்றது; எண்குலைகின்றது. என்றது இந்திரசித்து செய்ய நேர்ந்துள்ள வெய்ய தீமையை விளக்கி நின்றது. வையமும் வானமும் ஐயோ! என்று அலமந்து துடிக்கின்றன; சீவர்களுடைய நெஞ்சங்கள் நெடுங் திகில்க ளாய் நிலை குலைந்து கலங்குகின்றன; உன் கொலை வினையை நோக்கிப் பலவும் பதைக்கின்றன; நீ யாதும் பதையாமல் வதை புரிய மூண்டது எல்லா உயிர்களையும் ஒருங்கே கொன்ற படியாம்; நெஞ்சம் தெளிந்து நிலைமையை உணர்ந்து நீசம் நீங்கி யருள் என்று பாசம் தோய்ந்து பரிந்து சயந்து வேண்டினன். வெட்டி வீழ்த்தியது. இன்னவாறு அறிவு பல கூறி அனுமான் மறுகி வேண்டி யும் அவன் யாதும் இசையாமல் மோதி முனிந்தான். 'என் குடியையும் குலத்தையும் அடியோடு அழிக்க வந்த இவளைக் கொன்று ஒழிப்பதால் எனக்கு வென்றியும் புகழுமே அன்றி வெப்ய பழி உண்டாகாது. இவளோடு மாத்திரம் அன்று; இவள் பிறந்த ஊரையும் புகுந்த ஊரையும் நாசமாக்கி விடுவேன்; அயோத்தி புகுந்து அங்கே பரதன் முதலாயினேரைக் கொன்று தொலைத்து அரச குடும்பத்தையே அழித்து ஒழித்து ஊரையும் சிதைத்து நான் விரைந்து மீளுவேன்; அந்த வெற்றி வேள்விக்கு முதல் அறி குறியாக இவளை இகோ வீரப் பலியிடுகிறேன்" என்று கூறிக்கொண்டே சீதையை ஓங்கி வெட்டி வீழ்த்திவிட்டு மேலே கின்ற புட்பக விமானத்தில் விரைந்து தாவித் திருவயோத் திக்குப் போவதாக வடதிசை நோக்கி அதி வேகமாய்ப் போனன். திய மாயாவியான மேகங்ாதன் வான விதியில் போன தும் சானகி மாண்டு ஆண்டு வீழ்ந்ததும் சடிதியில் நிகழ்ந்தன. அனுமான் விழுந்தது. சீதை கழுத்தில் வெட்டு விழவே அனுமான் உயிர் பதைத் துக் கீழே விழுந்தான். மூச்சு கின்றது; பேச்சிழந்து யாதும் அசையாமல் அயர்ந்து கிடந்தான். சிறிது போது கழிந்ததும் தெளிவடைந்தான்; விழி திறந்து பார்த்தான்; சோகத் தீயில்