பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4655 கை அறிந்தான்; அதிசயமடைந்தான்; அதிவேகமாய் மீண்டு வந்து இராமநாதனிடம் யாவும் தெரியச் சொன்னன். தேவி இருந்தாள் என்று தெரிந்ததும் பிரிந்து போன ஆவி வந்தது போல் இவ் வீரன் பேருவ கை கொண்டான்; அந்தச் சோபனத்தைச் சொன்னவனே ஆவலோடு கழுவி ஆர்வம் மீக் கூர்ந்தான். விழுமிய நீர்மையுடைய இவன் கெழுமிய அன் போடு அவனைத் தழுவி மொழிக்க மொழிகள் உவகையின் ஒளி களாய் ஒங்கி எழுந்தன. ஆர்வ வுரைகள் ஆவலாய் வந்தன. வீரனும் ஐயம் தீர்ந்தான் விடணன் தன்னே மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி ஐய! தீர்வது பொருளோ துன்பம் யுேண்டு தெய்வம் உண்டு மாருதி யுண்டு காம்செய் தவம் உண்டு மறையும் உண்டால். ஐயனே! அம்மை சுகமா யிருக்கின்ருள் என்று வீடணன் வந்து சொன்ன போது இராமன் அவனே உவந்து கழுவி உள்ளம் உருகி உரையாடி யிருக்கும் நிலைகளே இங்கே உணர்ந்து மகிழ்கின்ருேம். உயிருணர்ச்சிகள் ஒளி விசி யுள்ளன. அடியோடு அழிவு நேர்ந்தது என்று அழி துயரோடு மறுகி நின்றவன் தேவி இருப்பது தெரியவே ஆவி வந்தபடியாய் ஆனந்தம் அடைந்துள்ளான். அடைந்த துன்பங்கள் யாவும் ஒழிந்து கொலைய அந்த இன்பநிலையை வந்து சொன்ன அன்பன என்புருகக் கழுவி நன்றியறிவோடு இவ் வென்றி வீரன் விளம் பிய உரைகள் அறிவுகலம் சுரங்து அன்பு நலம் கனிந்து இன்ப நலம் மிகுந்து பண்பு பல நிறைந்து பரிவு மீதுளர்ந்து வந்தன. மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்றத் தழுவி. என்றது இலங்கைத் தம்பியை இங் கம்பி உழுவலன்போடு தழுவி நின்ற நிலை தெளிய வந்தது. மார்போடு இறுகத் தழுவி யிருக்கிருன். சீதை ஒருத்தி மாத்திரம் தனியுரிமையோடு தழுவி மகிழ வுரிய திருமேனியை வீடணன் இங்கே கழுவும் பேறு பெற்று விழுமிய நிலையில் விளங்கியுள்ளான். தன் உயிர்க்கு இன்னுயிரான தேவி இருப்பதைச் சொன்னவன் ஆதலால் அன்னவனே இன்னவன் இன்னவாறு இனிது கழுவி இன்ப வுரைகள் ஆடினன். அன்பு மொழிகள் பண்பு படிந்து வந்தன.