7. இ ரா ம ன் 4673 அவனது நிலை அதுபொழுது பரிதாபமா யிருந்தது. கருதிய படியே யாகம் முடிந்தால் அரிய பெரிய யோ கம் என்று நெடிய மகிழ்ச்சியோடு நிலைத்து நின்றவன் நேர்ந்த நிகழ்ச்சியால் கொடிய இகழ்ச்சி வந்ததே என்று குலே துடித்து அலமந்தான். வாப் பேசாமல் மவுனமா விரதம் பூண்டு செய்ய வேண்டிய கிலே பிழைபடவே இனி உய்தியில்லை என்று உள்ளம் தளர்ந்து எள்ளல்களை நினைந்து இந்ைது கொந்து உளைந்து கைந்தான். மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின் மோனமும் பாழ்பட என்றதல்ை இந்திரசித்து பட்டிருக்கும் பாடுகள் தெரிய வந்தன. ஆதரவாயமைந்து கின்ற சேனைகள் யாவும் பாழ்பட்டு அழிக் தன; மானமும் பாழாய்ப் போனது என்று மனம் மிக மறுகித் தனக்குள்ளேயே புலம்ப நேர்ந்தான் ஆதலால் மோனமும் பாழ் பட்டது என்ருர், பேசாத வாய் பேசும்படியாயது. அவலமான அழிகேடுகள் மூண்டன எ ன்று கவலையால் கதி கலங்கியிருந்தவன் பின்பு சிறிது மதி தெளிந்து விதி விளைவு களை நொந்து விருேடு பல பல கருதி நிலைமைகளை நினைந்து கெஞ் சம் துணிந்தான்; உறுதி உணர்ச்சிகள் ஊக்கி வந்தன. தொடங்கிய வேள்வியின் தூம வெங்கனல் அடங்கியது அவிந்துளது அமையுமா மன்றே இடங்கொடு வெஞ்செரு வென்றி இன்றுஎனக்கு அடங்கியது என்பதற்கு எது வாகுமால். (1) ஆங்கது கிடக்கநான் மனிதர்க்கு ஆற்றலன் நீங்கினன் என்பதோர் இழிவு நேருற சங்குகின்று யாவரும் இயம்ப என்குலத்து ஓங்குபேர் ஆற்றலும் ஒளியும் ஒல்குமால். (2) மந்திர வேள்விபோய் மடிந்த தாம் எனச் சிந்தையில் கினேந்து நொந்திருந்து தேம்புதல் அந்தரத்து அமரர்தாம் மனிதர்க்கு ஆற்றலன் இந்திரற்கே இவன் வலிஎன்று ஏசவோ? (3) செய்ய மூண்ட வேள்வி சிதைந்து போகவே இந்திரசித்து சிங்தை நொந்து தவித்துள்ளான். அந்த நிலைகளே இவை உணர்த் தியுள்ளன. மன வேதனைகள் கன வேகமா அவனே வகைத்திருக் 585
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/332
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை