பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4675 இந்திரசித்து மீது யாதொரு பானமும் தொடுக்கவில்லை, கையில் ஆயுதம் இல்லாமல் யாக தீக்கையோடு அவன் மேவியிருக்கமை யால் அவனே ஊறு ஒன்றும் செய்யாமல் இவ் வென்றி விரன் விருேடு விலகி நின்றது சீரோடு சிறந்த அரிய பண்பாடாப் உயர்ந்து பெரிய ஒளி மிகுந்து விளங்கியது. அருகே நெருங்கா மல் சிறிது அயலே வில்லைக் கரையில் ஊன்றி இலக்குவன் வீர கம்பீரமாய் கின்ருன். அங்கிலை விர தேவதையும் கரும தேவதை யும் விழைந்து வியந்து கானும் காட்சியாய் விளங்கி கின்றது. வானா விரர்கள் மூண்டு யாண்டும் சூழ்ந்து நீண்டு நின்றனர். அனுமான் அணுகியது. அந்த நிலையில் அனுமான் யாக குண்டத்தை அணுகினன். மேகநாதனை நோக்கி விளித்து வேகமாப் விவேக வுரைகள் ஆடி ஞன். அவல நிலையில் கவலையோடு கனன்று இருக்கின்ற அக்க வில் விரனைப் பார்த்து இந்தச் சொல் விரன் பேசிய பேச்சுகள் கொடிய சுடுகணைகளாய்க் கடிது எழுந்து வந்தன. சொல் அம்புகள் வில் அம்புகளினும் வீறு கொண்டு பாய்ந்தன. சில அயலே வருகின்றன. விநயமான வீர மொழிகள் நான்உனே இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய்! சானகி தன்னே வாளால் தடிந்ததோ தனதன் தந்த மானமேல் சேனையோடும் வடதிசை கோக்கி மீது போனதோ? கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய்! தடந்திரைப் பரவை அன்ன சக்கர யூகம் புக்குக் கிடந்தது கண்டது உண்டோ காண்ஒலி கேட்டிலாயோ தொடர்ந்துபோய்அயோத்தி தன்னேக் கிளேயொடும் துணிய நூறி கடந்தது எப்பொழுதும் வேள்வி முடிந்ததே கருமம்ான்றே. ஏந்தகல் ஞாலம் எல்லாம் இனிதுறைக் தியற்கை தாங்கும் பாந்தளிற் பெரிய திண்டோள் பரதனைப் பழியில் தீர்ந்த வேந்தனேக் கண்டு கிேன் வில் வலம் காட்டி மீண்டு போந்ததோ உயிரும் கொண்டேஆயினும் புதுமையன்றே. அம்பரத் தமைந்த வில்லிற் சம்பரன் ஆவி வாங்கி உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கும் கால்வர் ஆன தம்பியைக்கண்டுகின்றன் தனுவலம் காட்டிற் றுஉண்டோ?