பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,439 உலகம் கானும்படி இன்று நான் இங்கே காட்டவந்துள்ளேன். இந்திரசித்தினுடைய அம்புக்கு நல்ல இலக்கு ஆவான் என்னும் | துவினல் இராமன் தம்பிக்கு இலக்குவன் என்றுபேர் எய்ந்தது என்பதைப் பாரறிய நேர்ந்தது. உன் பெயர்க் குறிப்பை எனது அம்பு துலக்கிக் காட்டும்; யாவரும் கண்டு தெளிவர்; ஏ இலக் குவா! உன்னை நான் கொல்லக் குறிக்கொண்டுள்ளேன்; இந்தக் குறி எந்த வகையிலும் தவரு.து, சருவ சங்கார கருத்தாவாகிய சிவபெருமானே உனக்குத் துணையாய் வந்து உன்னைப் பாது காக்க நேர்ந்தாலும் நீ பிழைக்கமாட்டாய்; செக்கேதொலைவாய்; உனக்கு முன்பிறந்த உன் கமையனை இராமனைப் பின்னே கொல்லுவேன்; உன்னே முன்னதாக அழித்து ஒழிப்பேன்; இக் தச் சின்னக் காரியத்தை நான் சொன்னபடி செய்யவில்லையா ல்ை இலங்கை வேந்தனுக்குப் பிள்ளையாக நான் பிறந்ததனல் என்ன பயன்? என்னேடு வந்த அறுபது வெள்ளம் படைகளை யும் இரண்டுபேரும் சேர்ந்து அழித்தீர்கள்; உங்களுடைய எழு பதுவெள்ளம் சேனைகளையும் நான் ஒருவனே கொன்றுதொலைத்து வென்றி மாலைகுடி வீரப்புகழோடு ஊருக்கு மீளுவேன்; யாருக் கும் அஞ்சாத அருந்திறலுடைய கும்பகருணனை வென்றுவிட்ட காக விேர் இருவிரும் வீரச்செருக்கு மண்டியுள்ளீர்; அந்த உள் ளத் தருக்கை அடியோடு அகழ்ந்து விசி உங்களைக்கொன்று முடிக்கவே ஈண்டு நான் மூண்டுவந்திருக்கிறேன்; என்னுடைய சிறிய தந்தைக்கும் தம்பி அதிகாயனுக்கும் இன்னும் அந்திமச் சடங்குகள் செய்து முடிக்கவில்லை, இராமன் இலக்குவன் என் னும் உங்கள் இருவருடைய உதிரத்தைக்கொண்டே அந்தக் கருமக்கடனக் கழிக்கவேண்டும் என்று உறுதிசெய்து வந்தி ருக்கிறேன்; கருதியதை விரைவில் செய்து முடிப்பேன்' என இன்னவாறு இந்திரசித்து இலக்குவன் எதிரே இறுமாப்போடு உரையாடியிருக்கிருன். பேச்சால் பெருமையை விரித்தான். அவனுடைய வார்த்தைகளில் மானக்கொதிப்பும் வீரத் துடிப்பும் விரவி வந்திருக்கின்றன. எதிரிகள் அதிசய குரர்கள் என்று தெரிந்திருந்தாலும் தன்னுடைய அரிய ஆயுத பலங்களால் எப்படியும் வென்றுவிடலாம் என்றே முழுதும் கம்பியிருக்கி முன். அந்த மனவுறுதியினல் உரைகள் இவ்வண்ணம் உரம் ஏறி வந்துள்ளன. வீரதீரங்கள் வெளியே தெரிய மொழிகள் ஆரவா