பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5237 என்பதும் பிழையாய் முடியும்' என இங்கனம் தெளிவாக முடித்தான். மொழிகளில் உறுதி நிலைகள் ஓங்கியுள்ளன. எதிரியின் முதுகில் வடுவைக்கண்டு ஐயம் கொண்டு தனது வெற்றி மாசுபட்டது என்று மாறுபட்டு இராமன் மறுகி கின்ற போது கிருதர் பதியின் பெருமித நிலைகளே அதிசய கம்பீரமாக விடணன் துதிசெய்து கூறி மதி தெளியச் செய்துள்ளான். இராமனது சுத்த வீரத்தின் உத்தம நீர்மையும், இராவண னது விரபராக்கிரமத்தின் வெற்றி நிலையும் இங்கே ஒத்து உணர வந்தன. உத்தம வீரங்கள் உயர்ந்த நிலைகளில் ஒளி விசியுள்ளன. சரித்திர நிகழ்ச்சியில் விசித்திரக் காட்சிகளை வியக்க காண் பெருகி வருகின்றன. பெரிய சக்கர வர்த்திகளுடைய உக்கிர விரநிலைகள் ஒளி பெற்று மிளிர்கின்றன. அரிய பல சீவியங்களே இக்காவியம் ஒவிய உருவங்களாக் காட்டி உவகைகளை ஊட்டி யருளுகின்றது. விழுமிய வாழ்வுகளை வியந்து காண்கின்ருேம். History is the essence of innumerable biographies. (History சிறந்த பல சீவிய சரித்திரங்களின் சாரமே இதிகாசம் என இது குறித்துளது. காவிய சீவியங்கள் கருதி யுணர வுரியன.) அரசர் வீரர் அறிஞர் முதலிய அதிசய புருடர்களை இதி காசத்தில் காணும்போது மனம் மிக மகிழ்ந்து மதி தெளிந்து துதி செய்து வருகிருேம். யாரைக் கொண்டு வந்து காட்டின உம் அவருடைய சீரையும் சிறப்பையும் தெளிய விளக்கி நம் கவிஞர்பிரான் ஒளிசெய்து வருவது உவகையை விளைத்து வருகி றது. செவ்விய உணர்வு கலங்கள் எவ்வழியும் ஒளிவீசுகின்றன. எந்தப் பாத்திரங்களை எடுத்துப் பேசினலும் அவற்றின் உண்மையான சீவ நிலைகளைச் செம்மையாக விளக்கியருளுகின் ருர். இராச கம்பீரமும் வீர பராக்கிரமும் புலமைச் சுவையும் புத்தி போதனையும் இவருடைய உரைகள் தோறும் ஒளி விசி வருகின்றன. வீரம் கருணை முதலிய பலவகை நீர்மைகள் ர்ெமையா எவ்வழியும் சுவை சுரந்து தலைமையா மிளிர்கின்றன. The Hero can be a Poet, Prophet, King according to the kind of world he finds himself born into [Carlyle]