பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. @ π ո ա տ 5311 கிருள். அந்த நிலையில் இருக்கின்றவளிடம் இராமனுடைய அழைப்பின் மகிழ்ச்சியை அனுமான் ஆர்வத்தோடு வந்து உரைத் கான். அந்த உரையைக் கேட்ட பொழுது உள்ளம் களித்தத் துள்ளி எழுந்து மகிழ்ச்சியான வசனங்களைப் பேசி யிருக்க வேண்டும்; அவ்வாறு யாதம் பேசவில்லை; சித்திரப் பாவை போல் மவுனமாயிருந்தாள்; பின்பு ஏதோ பிதற்றினுள்; பயித்தி யம் பிடித்தவள் போல் மயங்கி மறுகியிருந்த அதன் பின் தெளிந்து பேச நேர்ந்தாள். தனது பழைய நிலைமையை நினைந்து நெஞ்சம் நாணினுள்; காணவே பாக்கியம் பெரும் பித்தும் பயக்கு மோ? என்று இந்த வாக்கியம் அவள் வாயிலிருந்து வெளி வர சேர்ந்தது. தன்னை மறந்த பரவசம் இன்னவாறு தெரியலாயது. (தனது கணவளுேடு கூடி மகிழும் பேரானந்த நிலை தனக்கு வாய்த்துள்ளமையால் அதனைப் பாக்கியம் என்று குறித்தாள். அது என்னைப் பயித்தியம் ஆக்கிவிட்டதே என்ற கில் பரவசமான உவகை நிலைகளும் உரிமைகளும் தொகையா உணர வந்தன. அனுமான் புரிந்து வருகிற அதிசய ஆதரவுகளை கினைந்து ததி செய்து கின்ருள். முன்னம் தாக வந்தபோது விரைந்து சென்று ஆண்டவனே அழைத்து வந்து எதிரியை அழித்த ஒழித்து உங்களைச் சிறை மீட்டி விடுவேன் என்று மாருதி கூறியபடியே வீரியமாய்ச் செய்து முடித்து அந்தக் காரிய சித்தியை நேரே சொல்ல வந்துள்ளதை உன்னி உன்னி உள்ளம் களித்தாள். மொய்சிறை என்றது கொடிய வலிய அதன் க டு ைம கருத வந்தது. மீளாத நிலை மீண்டது மிக்க மகிழ்ச்சியாய் நீண்டது. இரும்பு உண்டர்ே மீள்கினும் என்உழையில் கரும்பு. உண்டசொல் மீள்கிலள். [*ւ-ոպ, #64] riš ைேதயை இடையே மீட்டவங்க சடாயுவை நோக்கி இரா வணன் இவ்வாறு கூறியிருக்கிருன். எவ்வகையிலும் மீள முடி யாது என்று வெவ்விய கிலேயில் வி.றகொண்டிருந்த பகையை, சி.டி செய்து சிறை மீட்டியிருப்பது இராமனே ஆனலும் அவன் இவ்வாறு வெற்றி பெறுவதற்கு அனுமானே உற்ற துணையாப் உறுதி செய்துள்ளமையால் தன்னைச் சிறைமீட்டி யருளியது இவனே என்று பிராட்டி கேரே பேருவகை புரிந்துள்ளாள்)