7. இ ரா ம ன் 5133 அந்து என்னும் சொல் அது எனனும பொருளில் இங்கே வந்துள்ளது. அப்படி, அவ்வாறு எனத் தமிழில் வழங்குவதைக் ன்ேனடத்தில் அந்து என்கின்றனர். வில்விரன் சொல்லியவாறே மாகலி ஒல்லையில் செலுத்தவே தேர் விரைந்து விசும்பில் எழுந்து எதிரியின் எல்லேயை அடைக்கது. அடையவே இடை நிலை தெரி யாமல் இரண்டு தேர்களும் விரைந்த சாரிகள் திரிந்தன. விமானப் போர். இக்காலத்தில் வானவிதியில் விமானங்கள் போராடு வதைக் காட்டிலும் அந்த இரகங்கள் அதிசய நிலைகளில் கதிவேகம் சீட் டிக் கடுவேகமாய் அமர்கள் ஆடின. தேர்களில் இருந்த வீரர் இருவரும் நேரே சரங்களைத் தொடுத்தனர். அந்தப் பாணப்பிர யோகங்கள் குறிகளை யாண்டும் காண முடியாதபடி சாரதியர் இருவரும் சாதுரிய சாகசமாத் தேர்களைக் கடாவிப் போர்களை விலக்கித் தங்கள் சீர்களைத்துலக்கிச்செருமுகநிலைகளை விளக்கினர் வான மண்டலம் யாண்டும் வலம் இடமாகச் சாரி திரிந்து வந்த காட்சி அதிசயமான வீரமாட்சிகளாப் விளங்கி கின்ற இரிந்தன மழைக்குலம் இழுகித் திக்கெலாம் உரிந்தன. உடுக்குலம் உதிர்ந்து சிந்தின நெரிந்தன. நெடுவரைக் குடுமி நேர்முறை திரிந்தன சாரிகை தேரும் தேருமே. (1) வலம்வரும் இடம்வரும் மறுகி வானெடு கிலம்வரும் இடம்வலம் கி.மிரும் வேலேயும் அலம்வரும் குலவரை அனேத்தும் அண்டமும் சலம்வரும் குயவன திகிரித் தன்மைபோல். ,2) எழும்புகழ் இறைவன்தேர் அரக்கன்தேர் இதென்று உழுந்துருள் பொழுதின் எவ் வுலகும் சேர்வன தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர் பிழம்பின திரிவன என்னும் பெற்றியார். (3) இந்திரன் உலகத்தார் என்பர் என்றவர் சந்திரன் உலகத்தார் என்பர் தாமரை அந்தணன் உலகத்தார் என்பர் அல்லரால் " *மந்தர மலேயினர் என்பர் வானவர். (4)
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/24
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை