பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ኧ788 கம்பன் கலை நிலை விளக்க வருகிறத' என்னும் இது இங்கு அறிய வுரியது. பி ஞசு தேசத் துப் பேரறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிரு.ர். மன்னுயிர்க்கு இகம்செய்வதே மன்னவன் கடமை என்பதை னர் காட்டு அறிஞரும் எவ்வழியும் இயம்பி வருகின்றனர். வேர்களுக்கு இரங்கி அருள் புரிபவன் தெய்வீக நிலையில் உயர்ந்து வருகிருன் யாவரும் இன்புற அன்புசெய்த ஆண்ட மையால் யாண்டும் ஆண்டவன் என இந்த ஆண்டகையைத் திசைநோக்கித் தொழுது எல்லாரும் துதித்து வந்தனர். (தாயினும் உயிர்க்கு நல்லன் என்று தாய் வயிற்றிலிருந்து தோன்றிய மானிடர் எல்லாரும் இத் தளயவனே உழுவலன்போடு உவர்து போற்றி வந்தார். விழுமிய பண்போடு ஆட்சி கடந்து வந்தமையால் யாண்டும் மாட்சிகள் நீண்டு நிலவின. கிலமகளும் மலர்மகளும் நெஞ்சம் களித்து வந்தனர். நல்ல விளைவுகளும் செல்வ வளங்களும் எங்கனும் நன்கு பொங்கிப் பொலிங்கன. வையம் முழுதும் தெய்வ நிலையமாப்ச் சிறந்து திகழ்ந்தது. நையுமாறு இன்றிக் காத்தான் நானிலப் பொறைகள் தீர்த்தே. இந்த ஐயன் காத்துவங்கள்ள ர்ேத்தியை இது வார்த்துக் காட்டியுள்ளது. அரசனுக்குக் காவலன் என்று ஒரு பெயர் மேவியுளது. வேலி பயிர்களைக் காத்து வருதல்போல் அரசன் உயிர்களைக் காத்து எவ்வழியும் இனித ஆதரிக்க வருகிருன். அரச வேலி அல்லது யாவதும் புரைதிர் வேலி இல். (சிலப்பதிகாரம், 25) அரசனே வேலியாக மதுராபதி என்னும் தெய்வம் இங்கனம் கூறியுள்ளது. அரசன் காவல் இல்லையேல் வேலி இழந்த பயிர் கள் போல் உயிர்கள் நிலை குலைந்த சாலவும் வருந்த நேரும். யாரும் யாரையும் நலியாமல் எல்லாரும் நலமாய் வாழ நாளும் நாடி ஆய்ந்து எங்கும் நன்கு காத்து வருபவனே கல்ல அரசன் ஆகிருன்; அவன் பாங்கோடு காங்கியுள்ள த செங் கோல் ஆகிறது. அவனுடைய ஆட்சியே பாண்டும் மாட்சி புடைந்து வருகிறது. அவ்வரவு இங்கே உறவாக் கெரிய வந்தது.