பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

++r

"...-...- :
..." or so به ایجیام---"rی = نتیجه

1938 கம்பன் கலை நிலை குன்றிடை இவரும் மேகக் குழுவிடைக் குதிக்கும்; கூடச் சென்றி.டின் அகலும், தாழின் திண்டலாம் தகைமைத் தாகும்; நின்றதே போல நீங்கும்; கிதிவழி நேயம் நீட்டும் மன்றலங் கோதை மாதர் மனம் எனப் போயிற்று அம்மா! (4) காயம்வேறு ஆகிச் செய்யும் கருமம்வேறு ஆகிற்று அன்றே ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே ஆயுமே லுறுதல் செல்லாம் அரக்கரா னவர்கள் செய்த மாயமே ஆயதே நான் வருங்தியது என்ருன் வள்ளல். (5) (மாரீசன் வதைப் படலம், 240.24%) தன் எதிரே வந்து கின்ற மானே இராமன் பிடிக்கச் சென்ற தும், அது துள்ளிக் குதித்து மெள்ள மெள்ள அடி வைத்துக் கொஞ்சி நடந்து வஞ்சித்து இழுத்துப் போனதும், வெகு தாா மாக இவன் விரைந்து தொடர்ந்ததும், அது வேகமாய்ண்ேடதும், இவன் வேகித்து மூண்டதும், முடிவில் மாய வஞ்சம் என்று கண்டு இத் தாயவன் நெஞ்சம் கடுத்ததும், கினைந்து கொந்ததும் இங்கே நோக்கி கிற்கின்ருேம். கருத்துான்றிக் கானும் அளவே நிகழ்ச்சியின் காட்சிகள் நேரே தெளிவாகின்றன. நடந்த கதையை இயற்கை நலம் கனியக் கவி வாைந்து காட் டும் நயம் வியக்து நோக்கத் தக்கது. 'மந்திரத்து இளையோன்' என்றது. இது மாயமான்; இதனை நம்பலாகாது எனச் சிறந்த ஆலோசனை கூறிய அந்த மதியூகத்தை கினைந்து. அரசனுக்கு அருகு கின்று அறிவுகலம் கூறும் மதி மங் திரி போல் இராமனுக் கு இலக்குவன் அமைந்திருக்கமை அறி விக்கப் பட்டது. உணர்வுரையும் உதவாது போயது. தம்பியின் வாய்மொழியை நம்பி கில்லாமல் மனைவியின் மனக் கவலையை கினேத்து வினை மேல் மூண்டு போனன் ஆதலால் 'வதனத்தாள் சலக்கை நோக்கி மானினைத் தொடால் உற்ருன்’’ என்ருர். கொண்டவள்பால் இவன் கொண்டுள்ள ஆசையும் பாச மும் அறிய வந்தன. தன் அருமைக் காதலியின் விருப்பத்தை கிறை வேற்றும் பொருட்டே இவ் விான் இங்ஙனம் போ நேர்ந்தான். இப் பெயர்ச்சி பல பெயர்ச்சிகளுக்கு எதுவாயது. o