பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1734 கம்பன் கலை நிலை சூர்ப்ப நகை இப்போது இங்கே வந்தது இராமனது அவ தார பூர்த்தியாய் அமைந்திருக்கிறது. அவள் வா வில்லையால்ை இவன் வக்க காரியம் முடியாது. தான் எடுத்த பிறப்பு இனிது பயன் படும்படி தானுகவே அவள் வலிந்து வந்துள்ளமையால் அவ் வவு தன் புண்ணியப் பயன் என இப் புண்ணியவான் வாய் புகன் றருளியது. சக்திய வாக்கில் வெளி வருவது கப்பாத தத்துவமாய் உய்த்துனா வுள்ளது. மையல் கோக்குடன் அக் கையல் வங் துள்ளாள்; அவள் வரவால் விளைவதை வையம் ஒர்ந்து கொள்ளும் படி இவ் வையன் மொழி இவ்வாறு மெய்யை அறிவுறுத்தியது. மங்கலமாக இங்கனம் முகமன் உரையாடிய பின் அவளைத் தெளிவாக இனந்தெரிந்து கொள்ள ஒளியாமல் வினவினன். ஏது பதி? ஏது பெயர்? யாவர் உறவு? இந்த மூன்று கேள்விகளையும் ஊன்றிப் பாருங்கள். வந்தவளுடைய ஊர் பேர் குலம் கோத்திரம் முதலியன முழுவதும் தெளிய விழைந்து இவ் வினுக்கள் வெளி எழுந்தன. ஏது பதி? என ஊரை முதலில் வினவியது இடம் சேய் மையோ, அண்மையோ என்னும் அவ்வுண்மையை அறிய. ஊர் எது? என்று கேளாமல் பதி என்றமையால் இவள் சிறிய பட்டி களில் இருப்பவள் அல்லள்; பெரிய நகரங்களில் வசிப்பவளே என வாசக் கலத்தை மாண்பாக மதித்துள்ளமை புலனுயது. ஊரை அடுத்துப் பேரை வினவியது நேயே ர்ேமை தெரிய. இறுதி வினு, தாய் தந்தை உற்ருர் உறவினர் எல்லாரையும் இனமாக அறிக் து கொள்ள வந்தது. இங்கனம் வினவியவனயும், அதற்குப் பதில் சொல்ல உள்ள வளையும் கவி அகி சாதுரியமா இணைத்துக் கூறி நகைச் சுவையை விளைத்திருக்கிரு.ர். வேத முதல் கேட்ட இக் கேள்விகளுக்குப் பேதை அவள் தன்னிலை விரிக்கத் தொடங்கினுள் எனக் கொடுத்து விடுக்கிருக் கிருர், பேதை மேதையிடம் பேச நேர்ந்தது பிழையும் எதமும்