7. இ ரா ம ன். 2983 தாள்தொறும் தொடர்ந்த தழங்குபொற் கழலின் தகைஒளி நெடுநிலம் தடவக் கேள்தொறும் தொடர்ந்த முறுவல் வெண்ணிலவின் முகமலர் இரவினும் கிளர: (5) தன்னிறத் தோடு மாறுதங் திமைக்கும் விேயம் தழைபட உடுத்த பொன்னிறத் துரசு கருவரை மருங்கில் o தழுவிய புதுவெயில் பொருவ மின்னிறக் கதிரிற் சுற்றிய பசும்பொன் விரற்றலை அவிரொளிக் கர சின் கன்னிறக் கற்றை ஈெடுகிழல் பூத்த கற்பக முழுவனம் கவின; (6) சன்ன வீரத்த கோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்த பொன்னெடு வரையில் தோற்றிய கோளும் நாளும் ஒத்து இடையிடை பொலிய, மின்னெளி மெளலி உதயமால் வரையின் மீப்படர் வெங்கதிர்ச் செல்வர் பன்னிரு வரினும் இருவரைத் தவிர்வுற்று உதித்ததோர் படி ஒளி பரப்ப; (7) அங்கயல் கருங்கண் இயக்கியர் துயக்கில் அரம்பையர் விஞ்சையர்க் கமைங்த மங்கையர் நாக மடங்தையர் சித்தர் காரியர் அரக்கியர் முதலாக் குங்குமக் கொங்கைக் குவிமு லேக் கனிவாய்க் கோகிலம் துயர்ந்த மென்குதலை மங்கையர் ஈட்டம் மால்வரை தழtஇய. மஞ்ஞையங் குழுவென மயங்க; (8) மாலையும் சாங்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் துரசொடு காசும் சோலையின் தொழுதிக் கற்பகத் தருவும் நிதிகளும் கொண்டு பின்தொடரப் பாலின் வெண் பரவைத் திரைகருங் கிரிமேல் பரங்தெனச் சாமரை பதைப்ப;
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/179
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை