பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்குறுதி 221

நம்ப குடும்பத்தையும், தன் குடும்பமா நெனச்சு இவன் காப்பாத்தறதாச் சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொல்லு. பொண்ணைக் கட்டிக் கொடுத்தாவனும்: புள்ளங்களையும் ஆளாக்கியாகணும். உன் சீக்குக்கு, நீ இனிமே மேலே போற இடத்திலேதான் வைத்தியம் பார்க்கணும்; சோறே, மருந்து மாதிரி எப்பனாச்சும் விடச்சா, நெதமும் மருந்துக்கு வேறே நீ எங்கே அக்கா போறது?’ என்று கேட்டு, அவன் ஹரியைப் பார்த்தான்.

  • அதற்கு நான் என்ன செய்ய? இவ்வளவு நாளாய் வண்டா நீயும் என்னை மாதிரி திருடிக்கொண்டு வந்து கொடுக்கவில்லை?” என்ன கேட்கிறாயா!’ என்று ஹரி கோபத்தோடு கேட்டான்.

“இந்தாப் பாரு. இந்த வீறாப்பெல்லாம் எங்கிட்டே வேண்டாம். வெட்டிப் பயல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டிருக்க நான் ஆளில்லை. இந்தக் குடும்பத் துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? என்னை கேக்கற துக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? அப்படி இருந்தாப் பேசு- என் ஆயுசு பூரா இந்தக் குடும்பத்தை மறக்காமெ என் சொந்தக் குடும்பம் என்கிற நெனப்போடேயே இந்தக் குடும்பத்தையும் காப்பாத்தறேன்’னு சித்தி கையிலே அடிச்சுச் சத்தியம் பண்ணிக் கொடு. இந்த நிமிஷமே உன் நெக்லெஸை விகி எறியறேன். இத்தோட இந்தப் பக்கிரி பழைய தொழிலை விட்டுட்டு; எந்தக் கடையிலேனாச்சும் பீடி சுருட்டிப் பிழைச்சுப்பான். ஊம், ஏன் முழிக்சிறே? கையிடுல அடின்னதும், ஐயோ காசு போயிடுமே ன்னு “, lI &M) ) வந்துட்டதில்லை?” என்று பக்கிரி கிண்டலாகக் கூறிக் கொண்டிருந்த போதே ஹரி ஆவேசமாகப் பேசினான்

‘மாமா, நீ எதையும் சொல்லிக் கொடுத்து நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. இப்போது நானே பிறருக்குப் பாரமாக இருக்கிறேன்.