பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சும் அழகு 301

‘வீண் சிரமமா? யாருக்கு? உங்களுக்கு இத்தனை கஷ்டமும் ஏற்பட நான்தான் காரணம். வரும்போதே உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா?’’

இப்பொழுது யார் சொன்னார்கள்?’

  • யாரும் சொல்லவில்லை. சட்டைப்பையில் இருந்த மாத்திரைகளைப் பார்த்துத் தெரிந்துகொண்டோம். இங்கே வந்து இப்படி ஆகிவிட்டதே என்று, நான் பயந்து விட்டேன். நீங்கள் கண்விழித்து எழுந்திருக்க வேண்டுமே என்று, நான் இந்த உலகத்தில் வேண்டாத தெய்வம் ஒன்று பாக்கியில்லை’ என்று காந்தாமணி கூறினாள்.

அப்போது அங்கு வந்த அவர்கள் குடும்ப டாக்டர் ‘அதுமட்டுமல்ல மிஸ்டர் ஹரி: கடந்த நாலைந்து நாட் களில், உங்களை வந்து பார்க்காத டாக்டர் இந்த ஊரில் ஒருவர் பாக்கி இல்லை’ என்று சிரித்தபடியே கூறினார்.

ஹரியைச் சோதனை செய்துவிட்டு, இனிமேல் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டியதே இல்லை’ என்று கூறி, நல்ல ஆகாரங்கள், பழங்கள், ஹார்லிக்ஸ் மட்டும் கொடுங்கள். ஆனால் கண்டிப்பாக இன்னும் இரண்டு நாளாவது படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் ஒய்வு எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்றவர் ஒரு டானிக்கை யும் எழுதிக் காந்தாமணியின் தாயின் கையில் கொடுத்தார்.

உடனே காந்தாமணியின் தாய், அப்படியே இவள் கையையும் கொஞ்சம் பாருங்கள். ஹரி படுத்ததிலிருந்து, இவள் விழியே மூடவில்லை. இப்படியே கட்டிலின் கீழே உட்கார்ந்து கொண்டு, நேற்றுப் பகல் முழுவதும் இருமிக் கொண்டே இருந்தாள்’ என்று மகளைப் பற்றிச் சிபாரிசு செய்தாள்.

அதெல்லாம் ஒன்றுமில்லை. இனிமேல் எல்லாம் சரி யாகிவிடும். சாப்பிட்டுவிட்டு நன்றாகத் துரங்கச்சொல்