பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சும் அழகு 303

அவர்களுக்கெல்லாம் என்ன பதில் கூறுவது என்றே தெரியாததுடன், தான் இருக்கும் இடத்தையும் தெரிவிக்க முடியாத நிலையில் அகப்பட்டுக்கொண்டதையே எண்ணி ஹரி வேதனைப்பட்டான்.

சர்வசாதாரணமாகக் கூறிய பொய்க்கு, இத்தனை காலத்துக்குப் பிறகு சோதனை ஏற்பட்டதை எண்ணிப் பார்த்தான். காந்தாமணிதான் கல்யாணராமன் என்கிற உண்மை வெளியானால், எப்படி இருக்கும்? எத்தனை உயர்ந்த நோக்கத்துடன், அந்தப் பொய்யைச் சொல்லிக் காரியத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதைப் பற்றிச் சொன்னால், யாராவது நம்புவார் களா?

காயத்திரிக்டுக்கூட என் நிலையை விளக்க முடியாமற் போய்விட்டதே!’ என்று எண்ணித்தான் ஹரி வருந்தினான்.

  • என்ன ஸ்ார், யோசனை பலமாக இருக்கிறது: முதலில் வாயை கொப்புளித்துக் காபி சாப்பிடுங்கள்’ என்றாள் காந்தாமணி.

முகத்தைத் துடைத்துக் கொண்டு துண்டைக் கொடுத் தவன், பூசிக்கொள்ளத் திருநீறு கேட்டான். கீழே போய்ப் பழனி விபூதியைக் கொண்டு வந்நாள்.

அதை ‘முருகா, சுவாமிநாதா என்று எடுத்து அள்ளி அவன் பூசிக்கொண்டான். எதிரில் ஒரு தாம்பாளத்தில் இட்டிலி இருந்தது. இவ்வளவு நெய்யை அதன் தலையில் உருட்டி வைத்துத் தருகிறாயே, உடம்புக்கு ஒத்துக் கொள்ளுமா!’ என்று கேட்டான்

“எல்லாம் ஒத்துக்கொள்ளும். பேசாமல் வாயைத் திறந்து சாப்பிடுங்கள்.'"