பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயம் வெளுத்தது 337

நன்மைக்காகப் பொய் சொல்லவில்லை. நான் இப்படி நடந்துகொண்டது-சுய நலத்துக்காக அல்ல. நம் குடும்பத் தின்பொருளாதாரத் தேவைகளை ஒரளவாவது தீர்க்கவும், அப்பாவுக்கு நல்ல வைத்தியம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனுமே ஒப்புக் கொண்டேன்’ என்றான்.

அதற்காக? அப்பா தாம் ஆரம்பத்திலேயே அவர்கள் கேட்டபோது: முடியாது என்று அவர்களைத் திருப்பி அனுப்பி விடவில்லையா? அந்த இடத்தில் போய் நீங்கள்

மீண்டும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாமா?’ என்றாள் சுசீலா.

கூடாதுதான். அப்பாவிடம் அநுமதி கேட்டால் கிடைக்காது; அப்பாவின் மனமும் புண்ணாகக் கூடாது என்றே காந்தாமணியைக் கல்யாணராமனாக்கினேன். ஆனால், இதுவரை அவள் எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறாள் என்று கணக்குப் பார்த்தாயா? அவை நமக்குத் தக்க சமயத்துக்கு எவ்வளவு உதவியாக இருந்தன?”

பணம் கொடுக்கிறாள் என்பதற்காகவா?’’

அருகிலிருந்த ஹரி மின்சாரத்தினால் இயக்கப்பட்டவன் போல் சுசீலாவின் வாயைப் பொத்தினான்.

‘ஏன் இப்படிக் கத்துகிறாய்? அப்பாவின் காதில் விழுந்து, அவர் என்ன வென்று கேட்க வேண்டும் என்கிற ετ σύστ συντLρτ?”

சுசீலா சட்டென்று ஹரியின் கையைத் தன் வாயி னின்றும் ஒரு தட்டுத் தட்டினாள். ஹரி தன்னையே நொந்து கொண்டான். இவ்வளவு துணிச்சல் தனக்கு எப்படி வந்தது என்று அவனுக்கே புரியவில்லை.

ஆனால், அடுத்த விநாடி என்ன நினைத்தாளோ

என்னவோ, ஹரியின் கரங்களைச் சுசீலாவே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மெல்லக் கூறினாள்: “இனிமேல்