பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 புல்லின் இதழ்கள்

விட்டார்கள்! இப்பொழுதே எழுந்து சுவாமிமலைக்குப் போய் விடலாம் போல் அவருக்கு தெம்பு வந்து விட்டது!

சேகரும், சந்திராவும் மருந்து கொடுக்கவில்லை. அமிர்தத்தைக் கொடுத்துத்தான் இப்படி ஒர் அற்புதத் தைச் செய்திருப்பது போல் பாகவதருக்குத் தோன்றியது. அப்போது அவருக்கு இருந்த மகிழ்ச்சியில், உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே ஒரு பாட்டை பாடு, நிரவல் செய்து பத்து ஆவர்த்தனம் ஸ்வரம் பாடித் தள்ள வேண்டும் போலிருந்தது. நர்ஸிங் ஹோம் என்பதனால் அந்த ஆவலை அடக்கிக் கொண்டார். -