பூங்கொடி
90
95
100
105
110
உயர்தமிழ் மூன்றனுள் ஒன்றென நினையார் மயலறி வுடையார் மறந்தனர் வெறுத்தனர் : கல்லா மாந்தர் கையகப் பட்டது ; கில்லா தொழிந்தது நீள் புகழ் பட்டது : கற்றாேர் பலரும் முற்றுகை யிடின்அது நற்றமிழ் மரபாப் நாட்டினிற் பரவும்:
அடிகளார் விழைவு
ஆதலின் அருண்மொழி அரும்பெறற் பூங்கொடி ஒதல் வேண்டும் உயர்தமிழ் இசையை: தெருவெலாம் ஊரெலாம் சென்று நா டெலாம் உருகும் இசைத்தமிழ் ஒலித்து முழக்கி வெல்லுதல் ஒன்றே விழைந்தனென் , அதன்றலை
அடிகளார் வினவுதல்
சித்தனேக் கருக்களாஅப்ச் செந்தமிழ்ப் பாட்டால் பிந்திய மக்களைப் பேணலும் ஆகும் , ஏற்றுள நம்பணி எளிதினில் வெல்லும்; சாற்றிய மீனவன் தான்விடு சுவடியும் வேற்றிடன் புகாஅது விளைபயன் நல்கப் பூங்கொடி கையிற் புகுந்தது கல்லாப் ! ஈங்குன துளம்யாது?, என்றலும் உரைப்போள்
அருண்மொழி விடை
பெரியீர் நும்மொழி பேணுதல் ஒன்றே அறிவோம் யாங்கள், ஆதலின் என்மகள் நெறிமுறை பிறழா நேரிசைச் செல்வி கொடுமுடி தந்த கோமகள் எழிலி
96